புதிய திட்டங்கள் வழி 83,482 பேருக்கு வேலைவாய்ப்பு

புதிய திட்டங்கள் வழி 83,482 பேருக்கு வேலைவாய்ப்பு

1 mins read
bbdbbe9b-4427-4003-a8e7-775eae4ee824
-

சென்னை: தமி­ழ­கத்­தில் 83,482 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்­கக்­கூ­டிய வகை­யில் 49 தொழில் திட்­டங்­கள் செயல்­ப­டுத்­தப்­பட உள்­ளன. இது தொடர்­பான பல்­வேறு ஒப்­பந்­தங்­கள் நேற்று முதல்­வர் ஸ்டா­லின் முன்­னி­லை­யில் கையெ­ழுத்­தா­கின.

மொத்­தம் ரூ.28,508 கோடி முத­லீட்­டில் இந்த தொழில் திட்­டங்­கள் செயல்­ப­டுத்­தப்­பட உள்­ளன.

'முத­லீட்­டா­ளர்­க­ளின் முதல் முக­வரி- தமிழ்­நாடு' என்ற கருப்­பொ­ரு­ளின் கீழ் இந்த ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தி­டும் நிகழ்வு நடை­பெற்­றது. இதில் தொழில் அதி­பர்­கள், முத­லீட்­டா­ளர்­கள் பலர் பங்­கேற்­ற­னர்.

தொழில் திட்­டங்­க­ளுக்கு அடிக்­கல் நாட்­டிய முதல்­வர் மு.க.ஸ்டா­லின், ரூ.7,117 கோடி முத­லீட்­டில் 6,798 பேருக்கு வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கும் வகை­யில் ஐந்து திட்­டப் பணி­களை தொடங்கி வைத்­தார்.

மேலும், தமிழ்­நாடு தொழில் வழி­காட்டி நிறு­வ­னத்­தின் மேம்­படுத்­தப்­பட்ட ஒற்­றைச் சாளர இணை­ய­த்த­ளத்தை முதல்­வர் ஸ்டா­லின் துவக்கி வைத்­தார்.

இது இப்­போ­துள்ள முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு மட்­டு­மின்றி, புதிய முத­லீட்­டா­ளர்­க­ளுக்­கும் உத­வி­டும் வகை­யில், வணி­கம் செய்வதற்குத் தேவை­யான நூறு சேவை­கள் இந்த இணை­ய­த்த­ளத்­தில் வழங்க வழி­வகை செய்­யப்­பட்­டுள்­ள­தாக அரசு தெரி­வித்­துள்­ளது.