5 காசுக்கு பிரியாணி; கடை மூடல்

5 காசுக்கு பிரியாணி; கடை மூடல்

1 mins read
00702e4f-2d63-4c9f-a58a-c9fed9131832
-

மதுரை: மது­ரை­யில் பழங் காலத்து ஐந்து பைசாவை கொண்டு வரு­ப­வர்­க­ளுக்கு பிரி­யாணி வழங்­கப்­படும் என அறி­விப்பு செய்த கடையை மூடி முத்­திரை வைத்­த­னர் மதுரை மாந­க­ராட்சி அதி­கா­ரி­கள்.

தமி­ழ­கத்­தில் கொரோனா பாதிப்பு படிப்­ப­டி­யா­கக் குறைந்து வரு­வ­தால் மக்­க­ளி­டம் பெரும் நிம்­மதி நில­வு­கிறது. மூன்றா வது அலையை எதிர்­கொள்­ள­வும் அரசு தயா­ராக இருந்து வரும் நிலை­யில், மதுரை செல்­லூர் பகு­தி­யில் புதி­தாக திறந்த பிரி­யாணிக் கடை ஒன்­றில் மக்­களை ஈர்க்­கும் வகை­யில் 5 பைசா­வுக்கு பிரி­யாணி வழங்­கு­வ­தாக விளம்­ப­ரம் செய்­துள்­ள­னர்.

இத­னால், சுற்று வட்­டா­ரத்­தில் உள்ள மக்­கள் பல­ரும் பழைய 5 பைசா­வு­டன் பிரி­யாணி வாங்கு வதற்­காக காலை முதல் நீண்ட வரி­சை­யில் குவிந்­த­னர். பெரும்­பா­லா­னோர் முகக்கவ­சம் அணி­ய­வில்லை. சமூக வில­க­லை­யும் பின்­பற்­ற­வில்லை. இந்­நிலையில், உரிய கொரோனா விதி­மு­றை­க­ளைப் பின்­பற்­றா­மல் பொது­மக்­க­ளுக்கு பிரி­யாணி விற்­பனை செய்­த­தால் மதுரை மாந­க­ராட்சி அதி­கா­ரி­க­ளின் உத்­த­ர­வின் பேரில் பிரி­யாணிக் கடை மூடப்­பட்­டது.