ரூ.600 கோடி மோசடி; ஹெலிகாப்டர் சகோதரர்களை ேதடும் 6 தனிப்படை போலிசார்

ரூ.600 கோடி மோசடி; ஹெலிகாப்டர் சகோதரர்களை ேதடும் 6 தனிப்படை போலிசார்

2 mins read
4844ccc6-1dcf-4e6f-9e14-b271e6605630
-

ஹெலி­காப்­டர் சகோ­த­ரர்­கள் சொன்­ன­படி பணத்­தைத் திருப்­பித் தரா­மல் ரூ.15 கோடியை மோசடி செய்து­விட்­டனர். பணத்­தைக் கேட்­டால் அடி­யாட்­களை வைத்து எங்கள் உயி­ருக்கு மிரட்­டல் விடுக்கின்றனர்.

ஜப­ருல்லா-பைரோஸ் பானு தம்­ப­தி­யர்

கும்­ப­கோ­ணம்: பொது­மக்­கள், வர்த்­த­கர்­க­ளி­டம் ஒரு பங்கு பணம் கொடுத்­தால் அதை இரு மடங்­காக பெருக்­கித் தரு­வ­தா­கக் கூறி ரூ.600 கோடி பணத்தை ெஹலி­காப்­டர் சகோ­த­ரர்­கள் என்று அழைக்­கப்­படும் இரு­வர் மோசடி செய்­து­விட்­ட­தாக கும்ப கோணம் முழு­வ­தும் சுவ­ரொட்­டி­கள் ஒட்­டப்­பட்­டுள்­ளன.

நிதி நிறு­வன மோசடி தொடர்­பாக சகோ­த­ரர்­கள் மீது தஞ்சை மாவட்ட குற்­றத் ­தடுப்­புப் போலி­சார் வழக்­குப் பதிந்துள்ளனர்.

அவர்­க­ளது வீட்டை போலிசார் ஆய்வு செய்­த­போது இரு­வ­ரும் தலை­மறை­வா­னது தெரி­ய­வந்­தது. இத­னை­ய­டுத்து, இரு­வ­ரை­யும் பிடிக்க ஆறு தனிப்­படை போலிஸ் குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது.

தஞ்­சா­வூர் மாவட்­டம், கும்ப கோணம், தீட்­சி­தர் தோட்­டம் தெரு வைச் சேர்ந்­த­வர்­கள் தொழிலதி­பர்­க­ளான சகோ­த­ரர்­கள்.

எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சாமி­நா­தன் ஆகிய இரு­வ­ரும் எப்­போ­தும் ஹெலி­காப்­ட­ரி­லேயே வலம்­ வந்­த­தால் 'ஹெலி­காப்­டர் சகோ­த­ரர்­கள்' என அழைக்­கப் பட்டு வந்­துள்­ள­னர்.

கும்­ப­கோ­ணத்­தில் தங்களது 'விக்­டரி ஃபைனான்ஸ்' நிதி நிறு வனத்­தில் பணம் முத­லீடு செய்­தால் இரு மடங்­கா­கத் திருப்பித் தரப்படும் என ஆசை வார்த்தை கூறி பலரை ஏமாற்றியுள்ளனர்.

தற்­போது ஜப­ருல்லா-பைரோஸ் பானு தம்­ப­தி­யர் தஞ்சை மாவட்ட போலிஸ் அதி­காரி தேஷ்­முக் சேகர் சஞ்­ஜய்­யி­டம் அளித்­துள்ள புகார் மனு­வில், "ஹெலி­காப்­டர் சகோ­த­ரர்­கள் சொன்­ன­படி பணத்­தைத் திருப்­பித் தரா­மல் ரூ.15 கோடியை மோசடி செய்­து­விட்­டனர். பணத்­தைக் கேட்­டால் அடி­யாட்­களை வைத்து எங்கள் உயி­ருக்கு மிரட்­டல் விடுக்கின்றனர். ஆட்­சி­யில் உள்­ள­வர்­க­ளின் செல்­வாக்கு இருப்­ப­தா­க­வும் மிரட்­டு­கின்றனர்," என்று கூறியுள்ளனர்.