பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

1 mins read
62575d1b-1088-4cea-a65d-e115ef7d9650
-

மேட்­டுப்­பா­ளை­யம்: தென்­மேற்­குப் பரு­வ­மழை கார­ண­மாக கடந்த சில நாட்­க­ளாக நீல­கிரி மாவட்­டம் மற்­றும் அதனை சுற்­றி­யுள்ள பகு­தி­களில் கன­மழை பெய்து வரு­கிறது. தொடர் மழை கார­ண­மாக பில்­லூர் அணைக்கு நீர்­வ­ரத்து திடீ­ரென அதி­க­ரித்­துள்­ளது.

தொடர்ந்து நீர்­வ­ரத்து அதி­க­ரித்து அணை­யின் நீர்­மட்ட உய­ரம் 97 அடி­யாக உயர்ந்­தது. இத­னால் பவானி ஆற்­றில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்டு வெள்­ளம் கரை­பு­ரண்டு ஓடு­கிறது. இதனை கருத்­தில் கொண்டு கரை­யோர பகுதி மக்­க­ளுக்கு வெள்ள அபாய எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­னர் கிராம அதி­கா­ரி­கள்.

இந்­நி­லை­யில் உடு­ம­லை­யில் உள்ள அம­ரா­வதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனால் அங்கும் மக்­க­ளுக்கு வெள்ள எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. கரை­யோ­ரப் பகுதி மக்­கள் அனை­வ­ரும் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு செல்­லு­மாறு அதிகாரிகள் அறி­வு­றுத்தி உள்­ள­னர். அணை­யில் உபரி நீர் திறக்க வாய்ப்­புள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.