சென்னை: தமிழகத்தின் கொரோனா தொற்று நிலவரத்தை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாநிலம் முழுவதும் 1,830 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் 24 பேர் தொற்றுக்குப் பலியானதாகவும் அது தெரிவித்தது.
புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டோரில் அதிகபட்சமாக கோவையில் 177 பேரும் ஈரோட்டில் 135 பேரும் சென்னையில் 130 பேரும் அடங்குவர். இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா கிருமித்தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 44,870 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 24 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை கிருமித்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,862ஆக அதிகரித்துள்ளது.
சென்னை, மதுரை, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கொரோனா தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை 2,516 பேர் கொரோனா கிருமித்தொற்றிலிருந்து
குணமடைந்து வீடுதிரும்பியதைத் தொடர்ந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,86,192ஆக அதிகரித்தது.
மேலும், மாநிலம் முழுவதும் 24,816 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.