கர்நாடகாவிலிருந்து கரை புரண்டு ஓடி வரும் காவிரி

கர்நாடகாவிலிருந்து கரை புரண்டு ஓடி வரும் காவிரி

1 mins read
11a26d5d-4590-4717-b0c1-79c4fcb37444
-

தரு­ம­புரி: தென்­மேற்­குப் பரு­வ­மழை கடந்த சில தினங்­க­ளாக தீவி­ர­ம­டைந்­துள்­ள­தைத் தொடர்ந்து தமி­ழ­கத்தை ஒட்­டிய கர்­நா­டக, கேரள எல்­லைப்­ப­கு­தி­களில் தொடர்­மழை பெய்து வரு­கிறது. காவிரி நீர்ப்­பி­டிப்பு பகு­தி­களில் பெய்த பலத்த மழை கார­ண­மாக கர்­நா­ட­கா­வில் கபினி மற்­றும் கிருஷ்­ண­சா­கர் அணை­கள் வேக­மாக நிரம்பி வரு­கின்­றன.

இத­னை­ய­டுத்து முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக கர்­நா­டக அணை­களில் இருந்து தமி­ழ­கத்­திற்கு கடந்த மாதம் முதல் கட்­ட­மாக 12,000 கன அடி நீரும் கடந்த 15ஆம் தேதி 21,000 கன அடி நீரும் திறந்து விடப்­பட்­டது. இத­னைத் தொடர்ந்து 3ஆம் கட்­ட­மாக வியா­ழக்­கி­ழமை 37,000 கன அடி நீர் திறந்­து­வி­டப்­பட்­டது. அந்த நீர் நேற்று தமி­ழக எல்­லை­யான தர்­ம­புரி மாவட்­டம் பிலி­குண்­டு­லுவை வந்­த­டைந்­தது.

கடந்த மூன்று நாட்­க­ளாக 7,000 கன அடி நீர் மட்­டுமே வந்­து­கொண்­டி­ருந்த நிலை­யில், தற்­போது 17,000 கன அடி நீர் வரு­கிறது. இதை­ய­டுத்து ஒகே­னக்­க­லில் உள்ள அரு­வி­களில் தண்­ணீர் ஆர்ப்­ப­ரித்து கொட்­டு­கிறது. தமி­ழ­கத்­திற்கு திறந்து விடப்­பட்­டுள்ள நீர் இன்று காலை மேட்­டூர் அணை­யைச் சென்­ற­டை­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.