பயணச்சீட்டு வாங்க போலிசுக்கு உத்தரவு

பயணச்சீட்டு வாங்க போலிசுக்கு உத்தரவு

1 mins read
a13a0fe1-c206-4cf2-8bc1-dd2d55dbfb8b
-

சென்னை: காவல்­து­றை­யி­னர் தங்­கள் சொந்தக் காரணங்­க­ளுக்­காக அர­சுப் பேருந்­தில் செல்­லும்­போது பய­ணச்­சீட்டு வாங்க வேண்­டு­மென தமிழ்­நாடு டி.ஜி.பி சைலேந்­தி­ர­பாபு உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளார்.

இது தொடர்­பாக காவல்­து­றை­யி­ன­ருக்­கு ­அ­வர் சுற்­ற­றிக்கை ஒன்றை அனுப்பி உள்­ளார்.

அதில், "கைதி­களை அழைத்­துச் செல்­லு­தல், கைதாணை தொடர்­பான பணி­கள், காவல்­துறை சார்ந்த பணி­ க­ளைத் தவிர சொந்தக் கார­ணங்­க­ளுக்­கா­கப் பேருந்­தில் செல்­லும்­போது காவல்­து­றை­யி­னர் பய­ணச்சீட்டு பெற­வேண்­டும். இது முறை­யாக நடை­பெ­று­கி­றதா என அதி­கா­ரி­கள் கண்­கா­ணித்து, விதி­மு­றை­க­ளைப் பின்­பற்ற நட­வ­டிக்கை எடுக்கவேண்­டும்," என கூறியுள்ளார்.