கோவை: தமிழகத்தில் ஒட்டுமொத்த மாக உள்ள 38 மாவட்டங்களிலும் கொவிட்-19 கிருமிப் பரவல் படிப்படியாகத் தணிந்து வருகிறது. இருப்பினும், 11 மாவட்டங்களில் மட்டும் அன்றாடப் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவித்து உள்ளன.
கோவை, ஈரோடு, சென்னை, சேலம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இப்பாதிப்பு 100 பேருக்கும் மேலாக பதிவாகி உள்ளது.
மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,808 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 48 ஆயிரத்து 497 ஆக அதிகரித்து உள்ளது.
அதேவேளையில், ஒரே நாளில் தொற்றில் இருந்து குணமடைந்து 2,447 பேர் வீடு திரும்பினர். இதுவரை 24 லட்சத்து 91 ஆயிரத்து 222 பேர் குணமாகியுள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 144,219 பேரிடம் பரிசோ தனை செய்ததில் 1,808 பேருக்கு கிருமி பாதிப்பு உறுதியானது.
"அத்துடன் ஞாயிறன்று 22 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33,911 ஆக அதிகரித்துள்ளது.
"ஒரேநாளில் கோவையில் 169, ஈரோட்டில் 130, சென்னையில் 126, சேலத்தில் 105, செங்கல்பட்டில் 99, தஞ்சாவூர், கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கிருமி பாதிப்பு சற்று அதிகரித்துக் காணப்பட்டது.
"குறைந்தபட்சமாக பெரம்பலூ ரில் ஆறு பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
"தமிழ்நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23,364ஆக குறைந்துள்ளது," என்று குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, விரைவில் கொரோனா இரண்டாவது அலை யின் தாக்கம் ஒரு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிருமித் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாவிட்டால் மூன்றாவது அலையை எதிர்கொள்ள நேரிடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதே அடுத்தடுத்த அலைகளின் பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்கான சிறந்த வழியாக அமையும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியாவும் பொது மக்களை எச்சரித்துள்ளார்.

