பிரதமருடன் பேசிய அதிமுக தலைவர்கள்

1 mins read
beda285b-f655-49a6-817d-1a3f32dd2791
-

புது­டெல்லி: அதி­முக ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஓ.பன்­னீர்செல்­வம், இணை ஒருங்­கி­ணைப்பாளர் எடப்­பாடி பழ­னி­சாமி ஆகிய இரு­வ­ரும் டெல்­லி­யில் பிர­த­மர் நரேந்­திர மோடியை நேற்று காலை நேரில் சந்­தித்­துப் பேசி­னர்.

நாடா­ளு­மன்ற வளா­கத்­தி­லுள்ள அலு­வ­ல­கத்­தில் நடைபெற்ற பிர­த­ம­ரு­ட­னான சந்­திப்­புக்­குப் பிறகு செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்த இரு­வ­ரும், "தமி­ழ­கத்­திற்குத் தேவை­யான தடுப்­பூ­சி­களை வழங்கவேண்டும். மேக­தா­து­ என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்­நா­ட­கா­வுக்கு மத்­திய அரசு அனு­மதி வழங்­கக்கூடாது. இந்த அணை கட்­டப்­பட்­டால் டெல்டா மாவட்­டங்­கள் இடு­காடாக மாறி விடும் எனத் தெரி­வித்­தோம்.

"கோதா­வரி - காவிரி இணைப்­புத் திட்­டத்தை விரைந்து செயல்­படுத்தவேண்­டும் எனக் கோரியுள் ளோம். இலங்கை கடற்படையின ரால் தமிழக மீனவர்கள் தாக்கப் படுவதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தினோம். அதிமுக மீது எந்த தொண்டருக்கும் அதிருப்தி இல்லை," என்று கூறினர்.

சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளிக்க ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவருமே மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.