'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம் விரைவில் தொடங்கும்

1 mins read
2d3da37a-032c-437f-b76b-494165b4b4fd
-

சென்னை: தமிழகத்தில் 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற முன்மாதிரி திட்டத்தை முதல்வர் விரைவில் துவக்கி வைப்பார் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி அல்லது தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளதாகவும் அவர் ேமலும் கூறினார்.

"மக்களைத் தேடி மருத்துவம் என்ற இத்திட்டம் உலகத்திற்கே ஒரு முன் மாதிரி திட்டமாக இருக்கும். நோயால் பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரச்சினைகளையும் கண்டறிந்து, அவர்களின் வீடுகளுக்கே சென்று மருத்து வம் பார்ப்பது, இலவசமாக மருந்துகளை அளிக்க உள்ளோம்," என்று கூறினார்.