95 தடுப்பூசி குப்பியைத் திருடிச் ெசன்ற பெண் பணி இடைநீக்கம்

95 தடுப்பூசி குப்பியைத் திருடிச் ெசன்ற பெண் பணி இடைநீக்கம்

1 mins read
74f0f0a3-102f-4e50-b5cf-4f6998c372b2
வேடசந்தூர் அருகே வீட்டில் தடுப்பூசி போடப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்ட வட்டார மருத்துவ அலுவலர் பொன்.மகேஸ்வரி (இடது). பணி இடைநீக்கம் செய்யப்பட்ட மகப்பேறு உதவியாளர் தனலட்சுமி (நடுவில்). படம்: தமிழக ஊடகம் -

கரூர்: மருத்­து­வ­ம­னை­யில் இருந்து தனது வீட்­டுக்கு யாருக்கும் தெரி யாமல் கோவி­ஷீல்ட் கொரோனா தடுப்­பூசி குப்­பி­க­ளைத் திரு­டிச்­சென்ற மகப்பேறு உத­வி­யா­ளர் தன­லெட்­சுமியின் வீட்­டில் இருந்து 95 தடுப்­பூசி குப்­பி­களை சுகாதாரத் துறை அதி­கா­ரி­கள் மீட்­ட­னர்.

இதையடுத்து, தன­லட்­சு­மியை பணி இடை­நீக்­கம் செய்து கரூர் ஆட்­சி­யர் பிர­பு­சங்­கர் உத்­தரவிட்­டார். "எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காத வகையில் போலி­சில் புகார் தரப்­பட்டு, நடவடிக்கை எடுக்க உத்­த­ர­வி­டப் பட்டுள்­ளது. மருத்­து­வ­ம­னை­யில் இருந்து தடுப்­பூசி எடுத்துச் செல்லப்பட்ட விதம் குறித்து விசா­ரணை அறிக்கை தாக்­கல் செய்ய உத்­தரவிட்­டுள்­ளேன்,'' என்­றார்.

திண்­டுக்­கல் மாவட்­டம், வேட சந்­தூர் அரு­கில் வசித்து வரும் தன­லட்­சுமி, 58, கரூ­ரில் உள்ள கஸ்தூரி­பாய் தாய்-சேய் நல மையத்­தில் அரசு மகப்­பேறு உத­வி­யா­ள­ரா­கப் பணி­பு­ரிந்து வந்தார்.

அங்­கி­ருந்து தடுப்­பூ­சி­களை திரு­டிச்ெ­சன்ற தன­லட்­சுமி, தனது வீட்­டில் வைத்து உற­வி­னர்­க­ளுக்­கும் அக்­கம்­பக்­கத்­தில் வசிப்­போருக்­கும் தடுப்­பூசி போட்­ட­தாக விசாரணை­யில் கூறி­னார்.

"வீட்டில் உள்ளவர்களுக்குத் தடுப்பூசி போட முதலில் எடுத்து வந்தேன். பின்னர், கிராம மக்கள் கேட்டதால் அதிகம் எடுத்து வந் தேன். தவறுதான்," என்றார்.