கோவை: தமிழகத்தில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒருபுறம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், மற்றொருபுறம் கறுப்புப் பூஞ்சை எனும் மியூகார்மைகோஸிஸ் தொற்றால் நீரிழிவு நோயாளிகள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
கோவை அரசு மருத்துவமனை யில் கறுப்புப் பூஞ்சை தொற்று காரணமாக சிகிச்சை எடுத்துக் கொண்டோரில் 80% பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என இம்மருத்துவமனையின் தலைமை மருத்துவர் நிர்மலா கூறியுள்ளார்.
கொரோனா கிருமி பாதிப்பு கார ணமாக அதிக நாள்கள் சிகிச்சை பெற்றவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், கட்டுப்பாடற்ற நீரிழிவு அறிகுறி உள்ளவர்கள், எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட வர்கள், ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோ ருக்கு இந்தக் கறுப்புப் பூஞ்சை பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளதாக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் நேற்றுமுன்தினம் வரை 433 பேர் கறுப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 80% நோயாளிகளுக்கு நீரிழிவு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தலைமை மருத்து வர் நிர்மலா கூறுகையில், "கோவை அரசு மருத்துவமனையில் தற்போது கறுப்புப் பூஞ்சை பாதிப்புடன் 111 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற னர். இதுவரை 170 பேருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளோம்.
"பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 80% பேருக்கு மேல் நீரிழிவு நோய் பாதிப்புள்ளவர்கள். மூக்கில் இருந்து ரத்தம் கலந்த சளி வருதல், முகத்தில் வலி, மரமரப்பு, கண்கள் சிவப்பாக மாறுவது, கண்ணைச் சுற்றி வீக்கம், கண் வலி, கண் பார்வை குறைபாடு, தலைவலி, பல்வலி, பற்கள் ஆடுவது ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ளவேண்டும்," என்றார்.

