கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரூ.1,500 கோடிக்கும் மேலாக ஊழல் செய்துள்ளார். மோசடியில் ஈடுபட்ட அவர்மீது சட்டப்படி கடும் நட வடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்னாள் அதிமுக நிர்வாகியும் இப்போதைய திமுக உறுப்பினரு மான ரேஸ்கோர்ஸ் ரகுநாதன் என்பவர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
ஒருசில தினங்களுக்கு முன்புதான் அதிமுக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 26 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி, தம்பி சேகர் மீது லஞ்ச ஒழிப்புப் போலிசார் வழக்குப் பதிந்துள்ளதாக தக வல்கள் வெளியாகின.
இந்நிலையில், கோவை மாநகரில் நிறைவேற்றவேண்டிய பல்வேறு திட்டங்களை முழுமையாக நிறை வேற்றாமல் மோசடியில் ஈடுபட்ட தாக அதிமுகவின் மற்றொரு முன்னாள் அமைச்சர் மீது தெரிவிக்கப்பட்டுள்ள புகார், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரேஸ்கோர்ஸ் ரகுநாதன் அளித்துள்ள புகார் மனுவில், "கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகளும் லஞ்ச லாவண்யங்களும் நடைபெற்று பொதுமக்களின் வரிப்பணத்தை பல்லாயிரம் கோடிகளில் வேலுமணியும் ஒருசில சட்டமன்ற உறுப்பினர்களும் மோசடி செய்துள்ளனர்.
"அத்திக்கடவு-அவிநாசி திட்டம், பில்லூர் குடிநீர் திட்டம், நொய்யல் புனரமைப்புத் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம், உக்கடம் மேம்பாலப் பணிகள், பந்தயச் சாலை திட்டம், குடிசை மாற்று வாரிய வீடுகள் திட்டம், சூயஸ் குடிநீர் திட்டம், வெள்ளலூர் பேருந்து நிலையப் பணிகள் ஆகியவற்றில் ஊழல் நடைபெற்றுள்ளது.
"அனைத்து கோவை மாநகராட்சிப் பணிகளிலும் 12% தரகுத் தொகை பெற்றுள்ளார். அதிக மாக கொள்ளையடித்த வேலுமணி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனக் கூறியுள்ளார்.
"புகார் குறித்த ஆதாரங்களைக் கேட்டுள்ளோம். அதன் அடிப்படையில் விசாரணை முறைப்படி நடத்தப் படும்,'' என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலிசார் கூறியுள்ளனர்.
ஆக அதிகமாக பொதுமக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து, மக்களை வஞ்சித்த எஸ்.பி.வேலுமணி மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து மக்களுக்கு உரிய நியாயம் வழங்கவேண்டும்.
திமுக உறுப்பினரும் திரைப்பட தயாரிப்பாளருமான ரேஸ்கோர்ஸ் ரகுநாதன்

