செங்கல்பட்டு: தமிழகத்தில் ஏறத்தாழ 1 லட்சத்துக்கு ஏழாயிரத்து 838 கர்ப்பிணிகள் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இம்மாதம் 3ஆம் ேததி தொடங்கியதை அடுத்து, தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 38 ஆயிரத்து 583 கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியனும் சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணனும் கூறியிருந்தனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், அனுமந்தபுத்தேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
இதைப் பார்வையிட்ட செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல்நாத் கூறுகையில், "செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தனிவரிசை அமைத்து முன்னுரிமை அளித்து வருகிறோம்.
"செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்றுவரை 4,048 கர்ப்பிணிகளுக்கும் 2,228 பாலூட்டும் தாய்மார்களுக்கும் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
"கிராமங்களில் வசிக்கும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றத்திறனாளிகளுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது," என்றார்.