தாதியின் கவனக்குறைவால் பிரசவமான பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு

தாதியின் கவனக்குறைவால் பிரசவமான பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு

1 mins read
c2b313cf-079b-4bf7-9ddd-591114ee5c5f
-

திரு­வள்­ளூர்: அரசு மருத்­துவ மனை­யில் பிர­ச­வ­மான பெண்­ணின் உட­லுக்கு ஒத்­து­க்கொள்ளாத ஊசியைப் போட்­ட­தால் அவர் உயி­ரி­ழந்ததாக­வும் தாதி­யின் கவ­னக்­கு­றைவே இந்த உயி­ரி­ழப்­புக்கு கார­ணம் என்­றும் பெண்­ணின் உற­வி­னர்­கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

திரு­வள்­ளூர் அரசு மருத்­துவ மனை­யில் அளித்த தவ­றான சிகிச்­சையே அண்மையில் பிர­ச­வ­மான பெண் வினி­தா­வின் இறப்­புக்கு கார­ணம் என அவ­ரது உற­வி­னர்­கள் புகார் கூறியுள்ளனர்.

அத்­து­டன், வினிதா வேண்­டாம் என்று கூறிய ஊசியை எதற்­காக போட­வேண்­டும் என்றும் கேள்வி எழுப்­பி­யுள்ள அவ­ரது உற­வி­னர்­கள், இது­கு­றித்து உரிய முறை­யில் விசா­ரிக்­க­வேண்­டும் என்­றும் கேட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

திரு­வள்­ளூர் மாவட்­டம், களக்­காட்­டூர் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் பிர­தீப். இவ­ரது மனைவி வினிதா. இந்த தம்­ப­திக்கு ஏற்­கெ­னவே ஐந்து வயது பெண் குழந்தை உள்ள நிலை­யில், வினி­தா இரண்டாவது முறை­யாக கர்ப்­பம் தரித்தார்.

இத­னால் கடந்த 20ஆம் தேதி திரு­வள்­ளூர் அரசு மருத்­துவமனை­யில் பிர­ச­வத்­திற்­காக அனுமதிக்­கப்­பட்­டுள்ள அவ­ருக்கு கடந்த 22ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்­துள்­ளது.

இதை­ய­டுத்து சில தினங்­க­ளுக்கு முன்பு வினிதா வீட்­டிற்­குச் செல்ல தயா­ரான நிலை­யில் அவ­ருக்கு தாதி ஒரு­வர் கட்­டா­யப்­படுத்தி ஊசி ஒன்­றைப் போட்­ட­தாகத் தெரிகிறது.

ஊசி போட்ட சில நிமி­டங்­களில் மருத்­து­வ­ம­னை­யி­லேயே மயக்­கம் அடைந்த வினிதா ஆபத்­தான நிலைக்­குச் சென்­றுள்­ளார்.

இதை­ய­டுத்து அவரை அங்­கி­ருந்து சென்னை எழும்­பூர் அரசு மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைத்­துள்­ள­னர். இருப்­பி­னும் நேற்று முன்­தி­னம் மதி­யம் வினிதா உயி­ரி­ழந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.