பெங்களூரு: கர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், கர்நாடகாவின் 23வது முதல்வராகப் பதவியேற்ற பசவராஜ் பொம்மைக்கு ஆளுநர் தாவர் சந்த் ஹெலாட் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
மூன்று துணை முதல்வர்களும் அமைச்சர்களும் நேற்று பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் ஒரு வாரத்துக்குள் அவர்கள் பதவி ஏற்பார்கள் என்று கூறப்படுகிறது.
முன்னாள் முதல்வர் எடியூரப்பா வின் அமைச்சரவையில் பசவராஜ் பொம்மை, 61, உள்துறை அமைச்ச ராகப் பொறுப்பு வகித்தவர்.
பசவராஜின் தந்தையான எஸ்.ஆர்.பொம்மையும் கர்நாடகத்தின் முதல்வராக இருந்தவர்.
"மக்களின் நன்னம்பிக்கையைப் பெற்று ஏழை மக்களின் வாழ்வு உயர பாடுபடுவேன்," என்று செய்தி யாளர்களிடம் பேசிய பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

