'அமைச்சர் என்பதால் விலக்களிக்க முடியாது'

'அமைச்சர் என்பதால் விலக்களிக்க முடியாது'

1 mins read
4ee5f637-c217-48b9-a2ad-1aedc29909ec
-

சென்னை: செந்­தில் பாலாஜி (படம்) தமி­ழக மின்­சா­ரத் துறை அமைச்­சர் என்­ப­தற்­காக விசா­ர­ணைக்கு முன்­னி­லை­யா­வ­தில் இருந்து அவ­ருக்கு விலக்கு அளிக்க முடி­யாது என சிறப்பு நீதி­மன்ற நீதி­ப­தி­கள் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர்.

"சட்­டத்­தின்­முன் அனை­வ­ரும் சமம்­தான். அமைச்­சர் என்­ப­தால் நேரில் முன்­னி­லை­யாக விலக்கு அளிக்­கவோ, சலுகை வழங்­கவோ முடி­யாது. நிச்­ச­யம் ஆகஸ்ட் 6ஆம் தேதி அவர் நேரில் முன்­னி­லை­யாக வேண்­டும்,"

என நீதி­ப­தி­கள் கண்­டிப்­பு­டன் கூறி­னர்.

கடந்த அதி­முக ஆட்­சி­யின்­போது போக்குவ­ரத்­துத் துறை அமைச்­ச­ராக இருந்­த­வர் செந்­தில் பாலாஜி. தனது துறை­யில் வேலை வாங்­கித்­த­ரு­வ­தா­கக் கூறி பல கோடி ரூபாய் மோச­டி­யில் ஈடு­பட்­ட­தாக பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் இவர் மீது புகார் அளித்­த­னர்.

இதைத்தொடர்ந்து, எம்­எல்ஏ, எம்.பி.க்கள் மீதான வழக்கு விசா­ரணை நடை­பெ­றும் சிறப்பு நீதி­மன்­றத்­தில் விசா­ரணை நடை­பெற்று வரு­கிறது.

தற்­போது திமு­க­வில் மின்­சா­ரத் துறை அமைச்­ச­ராக உள்ள செந்­தில் பாலாஜி, தனக்கு நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யாக விலக்­க­ளிக்­கும்­படி பலமுறை கோரி­யுள்ளதுடன், நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­காமலும் இருந்து வருகிறார்.