தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விபத்தில் சாலையில் தூங்கிய 18 ேபர் பலி

2 mins read
c010f128-04fc-4337-a6ca-79f542dcc1c8
-

லக்னோ: உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் பழு­தாகி நின்றுகொண்­டி­ருந்த பேருந்து மீது கன­ரக வாக­னம் ஒன்று அசுர வேகத்­தில் வந்து மோதி­ய­தில், பேருந்­தின் முன்புறம் சாலை­யில் படுத்து தூங்­கிக்­கொண்டு இருந்த 18 தொழி­லா­ளர்­கள் உயி­ரி­ழந்­துள்­ள­தாக இந்­திய ஊட­கங்­கள் செய்தி வெளியிட்­டுள்­ளன.

அதிர்ச்­சி­யூட்­டும் இந்த விபத்­தில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு ஆழ்ந்த இரங்­கல் தெரி­வித்­துள்ள பிர­த­மர் மோடி, உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ருக்கு தலா ரூ.2 லட்­சம் உதவி நிதி வழங்­கப்­படும் என­வும் காயம் அடைந்­த­வர்­க­ளுக்கு தலா ரூ.50,000 வழங்­கப்­படும் என­வும் தெரி­வித்­துள்­ளார்.

உ.பி. மாநி­லம், பார­பங்கி மாவட்­டத்­தில் உள்ள ராம் சனேஹி காட் பகு­தி­யில் நடந்த விபத்­தில், படு­கா­யம் அடைந்த 19 பேர் சிகிச்­சைக்­காக அரு­கில் உள்ள மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.

விபத்து குறித்து உ.பி. போலிஸ் தரப்­பில் கூறப்­பட்­டுள்ள தக­வ­லில், "உ.பி.யின் லக்னோ-அயோத்யா தேசிய நெடுஞ்­சா­லை­யில் இந்த விபத்து நேரிட்­டுள்­ளது.

"பீகார் மாநி­லத் தொழி­லா­ளர்­கள் பய­ணம் வந்த பேருந்­தில் பழுது ஏற்­பட்­டதை அடுத்து பேருந்து சாலை­யின் ஓர­மாக நிறுத்­தப்­பட்­டுள்­ளது.

"நள்­ளி­ரவு நேரம் என்­ப­தால் பேருந்­தில் இருந்து இறங்­கிய பய­ணி­கள் பேருந்­தின் முன்­பு­றம் சாலை­யில் படுத்­துத் தூங்கி உள்­ள­னர்.

"அதன்­பின்­னர் அதி­காலை 1.30 மணி­ய­ள­வில் வேக­மாக வந்த சரக்கு லாரி பேருந்­தின் பின்­புறத்­தில் மோதி­ய­தில் பேருந்­தின் முன்­பக்­கத்­தில் உறங்­கிக்கொண்­டி­ருந்த பீகார் தொழி­லா­ளர்­கள் 18 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

"இந்த விபத்து குறித்து வழக்­குப்­ப­திவு செய்து விசா­ரணை நடை­பெற்று வரு­கிறது," என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

காயம் அடைந்­த­வர்­களில் ஒரு சில­ரது உடல்­நிலை மோச­மாக இருப்­ப­தா­கக் கூறப்படுவதால் உயி­ரி­ழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.