மாநிலங்களவையில் முதல் முறையாக தமிழில் முழக்கம்

மாநிலங்களவையில் முதல் முறையாக தமிழில் முழக்கம்

1 mins read
e158aabe-e279-4856-8a72-526b3ff50dcd
-

புது­டெல்லி: மாநி­லங்­க­ள­வை­யில் விவா­தம் நடத்தப்பட வேண்டும் என்று கோரி முதன்­மு­றை­யாக எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும் ஒட்­டு­மொத்­த­மாக "வேண்­டும், வேண்­டும், விவா­தம் வேண்­டும்," என்று தமி­ழில் முழக்­க­மிட்­ட­னர்.

நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் இந்தி அல்­லது ஆங்­கி­லத்­தில் முழக்­க­மிடு­வதுதான் வழக்­கம். ஆனால், நடப்பு நாடா­ளு­மன்ற மழைக்­கால கூட்­டத்­தொ­ட­ரின் மாநி­லங்­க­ளவை கூட்­டத்­தில் சட்­டத்­தி­ருத்த மசோ­தாக்­கள் விவா­தம் இன்றி நிறைவேற்­றப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்பு தெரி­வித்த எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் விவா­தம் வேண்­டும் என்று தமி­ழில் முழக்­க­மிட்­ட­னர்.

தமிழக எம்­பிக்­கள் மட்­டு­மின்றி, மற்ற மாநில எம்­பிக்­களும் விவா­தம் வேண்­டும் என்று தமி­ழி­லேயே முழக்­க­மிட்­ட­னர்.