விருதை ஏற்கிறேன்; ரூ.10 லட்சம் பரிசு மக்களுக்கு தருகிறேன்

விருதை ஏற்கிறேன்; ரூ.10 லட்சம் பரிசு மக்களுக்கு தருகிறேன்

1 mins read
9e8cd220-a0a7-4fe0-abe6-a116c2fec14e
-

சென்னை: தனது சேவையைப் பாராட்­டும் வகை­யில் தமி­ழக அரசு அறி­வித்­துள்ள 'தகை­சால் தமி­ழர்' விரு­தினை ஏற்­றுக்­கொள்­வ­தா­க­வும் விரு­திற்­காக அளிக்­கப்­படும் ரூ.10 லட்­சம் தொகையை முதல்­வர் கொரோனா நிவா­ரண நிதிக்கு வழங்­கு­வ­தா­க­வும் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மூத்த தலை­வர் சங்­க­ரய்யா (படம்) தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழ­கத்­துக்­கும் தமி­ழி­னத்­துக்­கும் பெரும் பங்­காற்­றி­ய­வர்­க­ளுக்கு 'தகை­சால் தமி­ழர்' விருது வழங்­கப்­பட உள்­ள­தாக முதல்­வர் அறி­விப்பு வெளி­யிட்­டி­ருந்­தார்.

இதைத்­தொ­டர்ந்து, இவ்விரு­துக்­காக மூத்த தலை­வர் என்.சங்­க­ரய்யா தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவ­ருக்கு ரூ.10 லட்­சம் காசோ­லை­யும் பாராட்­டுச் சான்­றிதழும் வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று நடை­பெ­றும் சுதந்­திர தின விழா­வில் முதல்­வர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும் என்று அரசு வெளி­யிட்ட செய்­திக் குறிப்­பில் கூறப்­பட்டு இருந்­தது.

இந்­நி­லை­யில், "சுரண்­ட­லற்ற பொது­வு­டை­மைச் சமு­தா­யத்தை உரு­வாக்க நான் ஏற்­றுக்­கொண்ட மார்க்­சிய கொள்­கை­யின் அடிப்­படை­யில் பய­ணம் செய்­துள்­ளேன். எனது இறுதி மூச்சு வரை இப்­பணியைத் தொடர்ந்து நிறை­வேற்­று­வேன்," என்று சங்­க­ரய்யா கூறி­யுள்­ளார்.