மதுரை: தமிழகத்தில் புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேேவளை யில் புதிதாக 2,200 பேருந்துகளை வாங்குவதற்காக ஜெர்மனியில் இருந்து கடனுதவி வரவுள்ளது என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்து உள்ளார்.
"இப்போதைய அரசு தொழிலாளர்களுக்கான அரசாக விளங்கும். கொரோனா காலம் ஒரு முடிவுக்கு வந்தபிறகு அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளையும் அழைத்துப் பேசி, முதல்வருடன் ஆலோசித்து ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும். தொழிலாளர்களின் எந்தவொரு பிரச்சினையிலும் பின்வாங்காமல் நியாயமான முறையில் நடந்துகொள்வோம்," என்றும் அமைச்சர் ேமலும் கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் பேசியபோது, "கடந்த ஆட்சியின்போது அனைத்து துறைகளிலும் இருந்து வந்த குளறுபடிகளைச் சரிசெய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். இதில் பழிவாங்கும் உணர்வு என்பது கிடையவே கிடையாது. உப்பு தின்றவன் தண்ணீர் குடிப்பான்; தப்பு செய்தவன் தண்டனை அனுபவிப்பான்.
"கடந்த ஆட்சியில் ஏற்பட்ட தவறுகளைச் சரிசெய்வதே முதல்வர் மற்றும் அனைத்துத் துறை அமைச்சர்களின் வேலையாக உள்ளது. எனவே, இந்த ஆட்சியில் நியாயத்தை எதிர்பார்க்கலாம்," என்று கூறினார்.
உப்பு தின்றவன் தண்ணீர் குடிப்பான்; தப்பு செய்தவன் தண்டனை அனுபவிப்பான். இதுதான் உலக நியதி. கடந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்யவேண்டியது காலத்தின் கட்டாயம். இது யார் மீதும் பழி வாங்கும் நடவடிக்கை அல்ல.
போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்

