ெசன்னை, கோவை நகரங்களில் மீண்டும் அதிகரிக்கும் கொவிட்-19 கிருமித்தொற்று சென்னையில் நான்கு மடங்காக உயர்ந்த காற்றுத் தூய்மைக்கேடு மக்களிடம் தலைகாட்டும் மூன்றாம் அலை அச்சம்

ெசன்னை, கோவை நகரங்களில் மீண்டும் அதிகரிக்கும் கொவிட்-19 கிருமித்தொற்று சென்னையில் நான்கு மடங்காக உயர்ந்த காற்றுத் தூய்மைக்கேடு மக்களிடம் தலைகாட்டும் மூன்றாம் அலை அச்சம்

2 mins read
16fb6d33-5cbc-4651-9271-66411f7907e9
-

சென்னை: தமி­ழ­கத் தலை­ந­கர் சென்­னை­யில் காற்­றுத் தூய்­மைக்­கேடு வழக்­கத்தைவிட­ நான்கு மடங்காக அதி­க­ரித்து இருப்­ப­தா­க­வும் இத­னால் அங்­கு வசிக்கும் மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்டு உள்­ள­தா­க­வும் ஊடகத் தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

குறைந்த பரப்­ப­ளவும் அதிக மக்­கள் நெருக்­கடியும் நிறைந்த சென்­னை­ நகரில் வாக­னப்போக்கு­வரத்து, தொழிற்­சாலை­கள் ஆகி­ய­வற்­றால் காற்­றின் தரம் கேள்­விக்­கு­றி­யாகி உள்­ளதாகக் கூறப்படு கிறது.

தமி­ழ­கத்­தில் கொரோனா முதல், இரண்­டாம் அலை­யின் தாக்­கத்­துக்கு சென்னை, காஞ்சி, திரு­வள்­ளூர், செங்­கல்­பட்டு ஆகிய நான்கு மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த மக்­களே அதி­க­ள­வில் பாதிக்­கப்­பட்­டனர்.

இந்­நி­லை­யில், இந்த நான்கு மாவட்­டங்­களில் மற்ற மாவட்­டங்­களை விடவும் காற்றுத் தூய்மைக்கேடும் அதி­க­மாக உள்­ள­தாக ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது.

'ஆரோக்­கிய திற­னுக்­கான முன்­மு­யற்சி' என்ற அமைப்பு சென்­னை­யில் திரி­சூ­லம், பாரி­முனை, காசி­மேடு, திரு­வொற்றியூர், எண்­ணூர் அனல் மின்­நி­லை­யம் அரு­கில் உள்ள சேப்­பாக்­கம், வேளச்­சேரி, தி.நகர் உள்­ளிட்ட 20 இடங்­களில் ஆய்­வு நடத்தி உள்ளது.

சென்னையில் வீசும் காற்றில் காற்றுத் தூய்மைக்கேட்டை ஏற்படுத் தும் துகள்களின் அளவு அதி கரித்துக் காணப்படுவதுடன் சிலிக்கான், மாங்கனீசு, நிக்கல் உள்ளிட்ட ஆபத்தான துகள்களும் இருப்பதாக உறுதியாகியுள்ளது.

இவற்றால் நரம்பியல் பாதிப்புகள், புற்றுநோய், நுரையீரல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக திரிசூலம், வியாசர்பாடி, பாரிமுனை ஆகிய இடங்களில் காற்றுத் தூய்மைக்கேடு அதிகம் காணப்பட்டது.

இப்­ப­கு­தி­யில் வசிக்கும் இதய அல்­லது நுரை­யீ­ரல் பிரச்­சினை உள்­ள­வர்­கள், வய­தா­ன­வர்­கள், சிறார்­கள் உடல்ரீதி­யான செயல்­பா­டு­களை அதி­கம் மேற்­கொள்ளக் கூடாது என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அதனால் மக்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தின் முகப்பில் ெகாவிட்-19 தொற்றில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது. அதன் அருகே பயணிகள் நடந்து செல்கின்றனர். படம்: ஏஎஃப்பி

சென்னை: சென்னை, கோவை, ஈரோட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மூன்றாவது அலையின் அறிகுறியாக இருக்குமோ என்ற அச்சம் மக்களிடம் தலைகாட்டி உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் கிருமி பாதிப்பு படிப்படி யாகத் தணிந்து வரும் நிலையில், கடந்த புதன்கிழமை 1,756 பேருக்கு தொற்று உறுதியானது. எனினும் சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் 126 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 164 பேராக அதிகரித்துள்ளது. கோவையில் 179 பேரும் ஈரோட்டில் 140 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.