தேனி: சசிகலாவை அதிமுக பொதுக்குழுதான் கட்சியில் இருந்து நீக்கியது என்றும் அதிமுகவை தினகரன் கூறி யுள்ளது போல் அவ்வளவு எளிதாக யாராலும் கைப்பற்ற முடியாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம், போடியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது, "நடந்து முடிந்த தேர்தல் பிரசாரத்தின்போது 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நிறைவேற்றிய மக்கள் நலத்திட்டங்களைக் கூறி மக்களிடம் வாக்கு கேட்டோம். ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அக்கட்சியின் முன்னணித் தலை வர்களும் பொய்யான வாக்குறுதி களைக் கூறினர்.
"திமுக தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. அவற்றில் முக்கியமான வாக்குறுதிகளைக்கூட திமுக இன்னும் நிறைவேற்றாமல் உள்ளது. பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள்.
"கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அதிமுக அரசு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு இருக்கிறது என்று பிரதமர் மோடி பாராட்டினார். ஆனால், திமுக ஆட்சியில் கொரோனா மரணங்கள் மறைக்கப்பட்டு இருக்கிறது.
"சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் அளிக்க நான் தயாராக உள்ேளன்," என்று கூறினார்.

