தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வறுமை; இரு குழந்தைகள் விற்பனை; பெற்றோருடன் அறுவர் கைது

2 mins read
4e28bc74-a892-411c-bf36-ce7ab69888d6
பெற்ற குழந்தைகளை விற்பனை செய்தது தொடர்பாக கைதான ராபின், மோனிஷா தம்பதி.படம்: ஊடகம் -

ஊட்டி: உத­கை­யில் காதல் திரு­மணம் செய்து, பெற்ற குழந்­தை­களை வளர்த்து ஆளாக்க முடி­யா­மல் விற்­பனை செய்த பெற்­றோர் உள்­ளிட்ட ஆறு பேரை போலி­சார் கைது செய்­த­னர்.

நீல­கிரி மாவட்­டம், ஊட்­டியை அடுத்த காந்­தல் கஸ்­தூ­ரி­பாய் கால­னி­யைச் சேர்ந்­த­வர்­கள் ராபின், 29, மோனிஷா, 24.

தங்­க­ளது பெற்­றோ­ரின் எதிர்ப்­பை­யும் மீறி காதல் திரு­ம­ணம் செய்­து­கொண்ட இவர்­க­ளுக்கு ஓர் ஆண், இரு பெண் என மூன்று குழந்­தை­கள் உள்­ள­னர்.

தம்­ப­திக்கு மது அருந்­தும் பழக்­க­மும் இருந்­துள்­ளது.

இந்­நி­லை­யில், கொரோனா கால நெருக்­கடி கார­ண­மாக கார் ஓட்டுநரான ராபின் தனது வாழ்­வா­தா­ர­ம் பாதிக்­கப்­பட்­டு, வருமான­மின்றி குழந்­தை­க­ளைப் பரா­ம­ரிக்க முடி­யா­மல் அவ­திப்­பட்­டுள்­ளார்.

இதையடுத்து, தனது மூன்று வயது பெண் குழந்­தை வர்ஷாவை மோனிஷா தனது அக்கா பிர­வீ­னா­வி­டம் ஒப்­ப­டைத்­தார்.

இரண்­டா­வது பெண் குழந்­தையை ராபி­னின் நண்­பர் உத­வி­யு­டன் திருப்­பூ­ரைச் சேர்ந்த நிசார்­பாய், 51, என்­ப­வ­ரி­டம் ரூ.25,000க்கும் மூன்று மாதமே ஆன ஆண் குழந்­தை­யைச் சேலம் பகு­தி­யைச் சேர்ந்த உமா மகேஸ்­வரி, பூபதி தம்­ப­திக்கு ரூ.30,000க்­கும் பெற்­றோர் விற்­பனை செய்­துள்­ள­னர்.

அதன்பிறகு ராபின், மோனிஷா இரு­வ­ரும் மது போதை­யு­டன் பிர­வீனா வீட்­டுக்­குச் சென்று தனது குழந்­தை­யைத் திருப்­பித் தரும்­ப­டி­யும் அந்த குழந்­தையையும் விற்­க­வேண்­டும் என்­று கூறியும் வாக்கு­வா­தம் ெசய்­துள்­ள­னர்.

இதுகுறித்து மாவட்ட குழந்­தை­கள் பாது­காப்பு அலு­வ­லர், ஊட்டி அனைத்து மக­ளிர் காவல் நிலை­யத்­தில் புகார் அளித்­தார்.

விசா­ர­ணை­யில் வறுமை கார­ ண­மாக குழந்­தை­களை விற்றதை ராபி­ன், மோனி­ஷா ஒப்­புக்­கொண்­டதைத் தொடர்ந்து இவர்கள் உள்பட அறுவர் கைதாகி­னர்.