சென்னை: குற்றங்களுக்கு தண்டனை பெற்றுத் தரும் துறையாக மட்டுமின்றி, குற்றங்களே நிகழாமல் தடுக்கும் துறையாக காவல்துறை மாறவேண்டும் என்பதுதான் தனது ஆசை என காவல்துறை கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
இன்று இணைய வசதி வந்த தற்குப் பிறகு அடையாளமற்ற, முக மற்ற குற்றவாளிகள் ஏராளமாகப் பெருகிவிட்டார்கள் என்று வேதனை தெரிவித்துள்ள முதல்வர், "இணையவெளி பொருளாதாரக் குற்றங்கள் அதிகமாகிவிட்டன.
"நிதி மற்றும் பாலியல் குற்றவாளி கள் நவீன தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
"அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இணையக் குற்றங்களைத் தடுக்க மிகவும் நவீன வழிமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர். அத்தகைய நவீன வழிமுறைகளை நாமும் தெரிந்து ெகாள்ள வேண்டும்.
"2030க்குள் இணையக் குற்றங் கள் நடக்காத நாடாக மாற்றிக் காட்டப் போவதாக ஐக்கிய அரபு சிற்றரசுகள் அறிவித்துள்ளன. எத்த கைய தொழில்நுட்பத்தை அவர்கள் உருவாக்கப் போகிறார்கள் என்பதை நமது காவல்துறையும் அறிந்து கொள்ளவேண்டும்," என்றார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், "சட்டம்-ஒழுங்கு சிறப்பாக அமைந்து, பொதுமக்கள் பாது காப்பான சூழலை உணர்ந்துவிட்டால் மற்ற செயல்களைச் சரியாகச் செய்யலாம். சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தால்தான் தொழில் கள் சிறக்கும், முதலீடுகள் பெருகும். அச்சமின்றி மனிதர்கள் உழைப்பில் கவனம் செலுத்துவார்கள்.
"அரசாங்கத்தில் இருக்கும் எத்தனையோ துறைகளைப் போல காவல்துறையும் ஒரு துறைதான் என்று நீங்கள் நினைத்துவிடக்கூடாது. ஒரு அரசிடம் இருந்து முதலில் மக்கள் எதிர்பார்ப்பது அமைதியைத்தான். அந்த அமைதியை ஏற்படுத்தித் தரவேண்டிய பெரும் பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது," என்றார்.
தீயதை பொசுக்கும் தீயாகவும் அனைவருக்கும் பொதுவான வானமாக வும் காவல்துறை இருக்கவேண்டும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்

