திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே அதிர்ச்சியூட்டும் வகையில் பெண்ணின் உடல் பாகங்கள் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு மூன்று போலிஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள கொட்டாறு தரைப்பாலம் பகுதியில் எரிந்த நிலையில் மனித உடல் பாகங்கள் கிடப்பதாக ஜோலார்பேட்டை காவல் நிலை யத்துக்கு தகவல் கிடைத்தது.
போலிசாரின் முதல் கட்ட விசாரணையில், 30 வயது மதிக்கத்தக்க பெண் எரித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது.
தடயவியல் நிபுணர்கள் எரிந்த நிலையில் கிடந்த கால், கை உள்ளிட்ட உடல்பாகங்களைக் கைப்பற்றி தடயம் சேகரித்தனர்.
சிம்பா என்ற மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு, ரத்தக் கறைகள் படிந்த புடவையை மோப்பம் பிடித்தது. அதன்பிறகு ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு ஓடிய சிம்பா, பெரிய கம்மியம்பட்டு பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் அருகே நின்றது.
அடையாளம் தெரியாத நிலை யில் மீட்கப்பட்டுள்ள பெண் ஒருவேளை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

