ஆசை காட்டி, மோசம் செய்த இளையருக்கு 10 ஆண்டு சிறை

ஆசை காட்டி, மோசம் செய்த இளையருக்கு 10 ஆண்டு சிறை

1 mins read
395d7479-c4be-4821-8a4f-85cf2c27d92d
-

கட­லூர்: இளம்­பெண்­ணு­டன் நீண்ட நாட்­க­ளா­கப் பழகி, திரு­ம­ணம் செய்து­கொள்­வ­தாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்­றிய இளை யருக்கு கட­லூர் மக­ளிர் நீதி­மன்­ற நீதி­பதி பால­கி­ருஷ்­ணன் 10 ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை, ரூ.50,000 அப­ரா­தம் விதித்து தீர்ப்­ப­ளித்­தார்.

கட­லூர் மாவட்­டம், சேத்­தி­யாத் தோப்பு பகு­தி­யைச் சேர்ந்­த­வர் அருண்­கு­மார், 24. கடந்த 2017ஆம் ஆண்டு எம்­எஸ்சி படித்து வந்த இவ­ருக்­கும் அர­சுக் கல்­லூ­ரி­யில் படித்து வந்த 22 வயது பெண் ஒரு­வ­ருக்­கும் இடையே பழக்­கம் ஏற்­பட்டு, காத­லித்து வந்­துள்­ள­னர்.

இதைத்­தொ­டர்ந்து, பெண்­ணி­டம் பாலி­யல் அத்­து­மீ­ற­லில் ஈடு­பட்டு வந்­துள்ள அருண்­கு­மார், அதன்­பின் பல­முறை கேட்­டும் திரு­ம­ணம் செய்­து­கொள்ள மறுத்து­விட்­டார். கட­லூர் மக­ளிர் நீதி­மன்­றத்­தில் அருண்­கு­மார் மீதான குற்­றம் நிரூ­பணமானது.