சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் அரசின் வழிகாட்டு நெறிமுறை களைப் பின்பற்றி வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி முதல் நாள்தோறும் பள்ளிக்கு வந்து பணிபுரியவேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை, பாடப் புத்தகங்கள் விநியோகம், கல்வித் தொலைக்காட்சி வழி பாடம் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்துதல், பள்ளி வளாகங்களை பராமரித்தல் போன்ற பணிகளுக்காக ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வருகை தரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் நாள்தோறும் பள்ளிக்கு வரும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

