46 மாவட்டங்களில் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிப்பு

46 மாவட்டங்களில் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிப்பு

3 mins read
94f3ebaa-1b5c-4549-9254-459022b06165
பஞ்சாப் மாநிலத்தில் ஆகஸ்ட் 2 முதல் பள்ளிகள் திறக்கப்படு கின்றன. இதையடுத்து பள்ளிகள் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்படுகின்றன. படம்: தகவல் ஊடகம் -

கேரளாவில் பாதிப்பு உச்சத்தை அடையும் என நிபுணர்கள் எச்சரிக்கை

புது­டெல்லி: நாடு முழுவதும் பத்து மாநிலங்களில் உள்ள 46 மாவட்டங்களில் தொற்று விகிதம் பத்து விழுக்காட்டுக்கும் அதிகமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், 53 மாவட்டங்களில் தொற்று விகிதம் ஐந்து முதல் பத்து விழுக்காட்டுக்குள் இருப்பதாகவும் மிக விரைவில் இவையும் பத்து விழுக்காட்டைக் கடந்துவிடும் ஆபத்து உள்ளதாகவும் சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என அந்த அமைச்சு அறிவுறுத்தி உள்ளது.

கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், ஒடிசா, அசாம், மிசோரம், மேகாலயா, ஆந்திரா, மணிப்பூர் ஆகியவையே அந்த பத்து மாநிலங்கள் ஆகும்.

தொற்றுப்பரவல் விகிதத்தைக் குறைக்க இப்போதே நடவடிக்கை எடுக்காவிடில் விளைவுகள் மோசமாகிவிடும் என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

இதற்கிடையே, கேர­ளாவைத் தொடர்ந்து மகா­ராஷ்­டிரா, கர்­நா­ட­கா­வி­லும் கொரோனா கிரு­மித்­தொற்று மீண்­டும் அதி­க­ரிக்­கத் தொடங்­கி­உள்­ளது.

கேர­ளா­வில் தற்­போது நாள்­தோ­றும் புதி­தாக சுமார் 20 ஆயி­ரம் பேருக்கு கிருமி தொற்றி வரு­கிறது. அங்கு தடுப்­பூசி போடும் பணி விரி­வு­ப­டுத்­தப்­படும் நிலை­யில், மகா­ராஷ்­டி­ரா­வி­லும் கர்­நா­ட­கா­வி­லும் தொற்று பாதிப்பு மீண்­டும் அதி­க­ரிப்­ப­தற்­கான அறி­கு­றி­கள் தென்­ப­டு­வ­தாக நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

அதே­ச­ம­யம், கேர­ளா­வில் தொற்­றுப் பாதிப்பு மிக விரை­வில் உச்­சத்தை அடை­யும் என­வும் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

மகா­ராஷ்­டி­ரா­வில் ஊர­டங்கு தொடர்ந்து அம­லில் உள்ள போதி­லும், எதிர்­பார்த்த அளவு தொற்று பாதிப்பு குறை­ய­வில்லை. அங்கு தினந்­தோ­றும் சரா­ச­ரி­யாக 6 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட புதிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கின்­றன.

வெள்­ளிக்­கி­ழமை 6,600 பேருக்கு புதி­தாக கிருமி தொற்றி உள்­ளது. மேலும், 231 பேர் கொரோனா பாதிப்­பால் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். இதை­ய­டுத்து கொரோ­னா­வால் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 132,566ஆக அதி­க­ரித்­துள்­ளது.

இதற்­கி­டையே, கர்­நா­ட­கா­வில் மீண்­டும் புது நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிப்­ப­தற்­கான அறி­கு­றி­கள் தென்­ப­டு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அங்கு கடந்த சில வாரங்­க­ளாக தொற்­றுப்­ப­ர­வல் கட்­டுக்­குள் இருந்­தது. தின­மும் 2 ஆயி­ரத்­துக்­கும் கீழ் பதி­வாகி வந்த அன்­றாட எண்­ணிக்கை, வெள்­ளிக்­கி­ழமை அன்று அதைக் கடந்து பதி­வா­னது. 34 பேர் தொற்­றுக்கு பலி­யா­கி­விட்­ட­னர். கேர­ளா­வில் கடந்த பத்து நாள்­களில் மட்­டும் 1.5 மில்­லி­யன் பேருக்கு கொரோனா பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்­சர் வீணா ஜார்ஜ் தெரி­வித்­துள்­ளார்.

பாதிக்­கப்­பட்­டுள்ள அனை­வ­ரும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு தீவி­ர­மாக கண்­கா­ணிக்­கப்­ப­டு­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், கேர­ளா­வில் தற்­போ­துள்ள பாதிப்பை விட மேலும் 50 விழுக்­காட்­டி­னர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட வாய்ப்­புள்­ள­தாக நிபு­ணர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­தைச் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

எனவே தடுப்­பூசி போடு­வதை மேலும் அதி­க­ரிக்க அரசு திட்­ட­மிட்டு உள்­ள­தா­க­வும் அடுத்து வரும் மூன்று வார காலம் பொது­மக்­கள் மிகுந்த கவ­ன­மு­டன் இருக்க வேண்­டும் என்­றும் அவர் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

ஆந்­தி­ரா­வி­லும் அன்­றாட பாதிப்பு எண்­ணிக்கை 2 ஆயி­ரத்­தைக் கடந்­துள்­ளது. எனி­னும், அங்கு ஊர­டங்கு தளர்­வு­க­ளின் ஓர் அங்­க­மாக மூன்று மாதங்­க­ளுக்­குப் பிறகு திரை­ய­ரங்­கு­க­ளைத் திறக்க அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது. எனி­னும், தொற்­றுப்­ப­ர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த வரும் 14ஆம் தேதி வரை இரவு நேர ஊர­டங்கு நீட்­டிக்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அண்டை மாநி­ல­மான தெலுங்­கா­னா­வி­லும் நூறு விழுக்­காடு பார்­வை­யா­ளர்­க­ளு­டன் இன்று முதல் திரை­ய­ரங்­கு­கள் இயங்­க அனுமதிக்கப்பட்டுள்ளது.