கத்தி முனையில் மிரட்டி திருமணம்: இளையர் புகார்

கத்தி முனையில் மிரட்டி திருமணம்: இளையர் புகார்

1 mins read
89067109-59f3-4e2b-991f-52e8306f9efe
-

போபால்: முப்­பது வய­தான அரசு வேளாண் அதி­கா­ரி­யைக் கடத்­திச் சென்று, கத்தி முனையில் மிரட்டி திரு­ம­ணம் செய்து கொண்­ட­தாக ஐம்­பது வயது பெண்­மணி மீது ஆட­வர் ஒரு­வர் போலி­சில் புகார் அளித்­த­து­டன், நீதி­மன்­றத்­தை­யும் அணுகி உள்­ளார்.

ரின்­கேஷ் என்ற அந்த அதி­காரி மத்­தி­யப் பிர­தே­சத்­தில் உள்ள ஜபல்­பூர் மாவட்ட வேளாண் அலு­வ­ல­கத்­தில் பணி­யாற்றி வரு­கி­றார். அதே அலு­வ­ல­கத்­தில் பணி­யாற்­றும் ஐம்­பது வய­தான கோகிலா என்ற ஒப்­பந்த ஊழி­யர் ஜூன் மாதம் 16ஆம் தேதி மூன்று பேரின் துணை­யோடு தம்மை ஒரு காரில் கடத்­திச் சென்­ற­தா­க­வும் பின்­னர் ஒரு கோவி­லில் வைத்து திரு­ம­ணம் செய்து கொள்­ளும்­படி கத்­தி­யைக் காட்டி மிரட்­டி­ய­தா­க­வும் ரின்­கேஷ் போலி­சா­ரி­டம் தெரி­வித்­துள்­ளார்.

வேறு வழி­யின்றி தாம் அப்­பெண்­ம­ணியை திரு­ம­ணம் செய்து­கொண்ட நிலை­யில், மறு­நாள் அந்­தப் பெண்­மணி வீட்­டில் தூங்­கிக்­கொண்­டி­ருந்த போது தப்­பி­ய­தா­க­வும் கூறி­யுள்­ளார்.