அரசு பள்ளிக்கூடங்கள் பக்கம் அதிகம் திரும்பும் மாணவர்கள்

அரசு பள்ளிக்கூடங்கள் பக்கம் அதிகம் திரும்பும் மாணவர்கள்

2 mins read
301f861a-0231-4917-8a7d-e2485f196f3d
ஏழை மாணவர்கள் இணையம் வழி கல்வி கற்கும் வகையில், தமிழ்நாடு அரசு, அரசு பள்ளி ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால் இணையக் கல்வி வானொலி உருவாக்கப்பட்டுள்ளது. இணையத் தொடர்பு வசதி இல்லாத மாணவர்களும் இதன் மூலம் சாதாரண 2ஜி அலைவரிசையில் இயங்கக்கூடிய கைபேசியில் கல்வி கற்று வருகின்றனர். படம்: தமிழக ஊடகம் -
Google News Preferred Icon

சென்னை: தமிழ்­நாட்­டில் தனி­யார் பள்­ளி­க­ளின் மோகம் தணிந்து அர­சாங்­கப் பள்­ளி­க­ளுக்­கான தேவை அதி­க­ரிக்­கிறது என்­றும் இந்த ஆண்டு தனி­யார் பள்­ளி­களில் இருந்து 200,000 மாண­வர்­கள் அரசு பள்­ளி­களில் சேர்ந்து உள்­ள­தா­க­வும் அந்த மாநி­லத்­தின் பள்ளி கல்­வித் துறை அமைச்­சர் அன்­பில் மகேஷ் பொய்­யா­மொழி தெரி­வித்து உள்­ளார்.

தமிழ்­நாட்­டின் பள்­ளிக்­கூ­டங்­களி­லும் கல்­லூ­ரி­க­ளி­லும் பயி­லும் மாண­வர்­கள் எழு­திய 100 புத்­த­கங்­களை வெளி­யி­டும் விழா தலை­மைச் செய­ல­கத்­தில் நடந்­தது.

'எழு­துக' என்ற தலைப்­பில் நடந்த விழா­வில் கலந்­து­கொண்ட அமைச்­சர், மாண­வர்­கள் அர­சாங்­கப் பள்­ளிக்­கூ­டத்தை நாடி­வ­ரும் போக்கு அதி­க­மாகி வரு­வ­தா­கத் தெரி­வித்­தார். மாநி­லத்­தில் தனி­யார் பள்­ளி­கள் அதிக கட்­ட­ணத்தை வசூல் செய்­வது ஆதா­ரங்­க­ளு­டன் தெரி­ய­வந்­தால் அர­சாங்­கம் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கும் என்­றும் அவர் எச்­ச­ரித்­தார்.

இருந்­தா­லும் தவறு செய்­யும் தனி­யார் பள்­ளி­க­ளைத் திருத்­தவே தாங்­கள் விரும்­பு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

தமிழ்­நாடு கல்­வி­யி­லும் புறப்­பாடத் திட்ட நட­வ­டிக்­கை­க­ளி­லும் இந்­தி­யா­விற்கு எடுத்­துக்­காட்­டா­கத் திகழ்­கிறது என்று குறிப்­பிட்ட அவர், இந்­தி­யா­வில் இது­வரை எட்­டாம் வகுப்பு மாண­வர் மட்­டுமே சொந்­த­மாக புத்­த­கம் ஒன்றை எழுதி இருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

ஆனால் தமிழ்­நாடு அவ­ரு­டைய சாத­னையை முறி­ய­டித்து இருக்­கிறது என்­றும் கோவை­யைச் சேர்ந்த நான்­காம் வகுப்பு மாணவி ஒரு­வர் தானே ஒரு புத்­த­கத்தை எழுதி சாதனை படைத்து இருப்­ப­தா­க­வும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

தமிழ்­நாட்­டில் அர­சுப் பள்ளி மாண­வர்­களின் கல்­வித் தரத்தை மேம்­ப­டுத்­த­வும் கொவிட்-19 சூழ்­நி­லை­யில் அவர்­கள் கல்வி கற்­பதை சாத்­தி­ய­மாக்­க­வும் அதி­ந­வீன முயற்­சி­கள் பல­வும் எடுக்­கப்­பட்டு வரு­வ­தாகத் தெரி­வித்த அமைச்­சர், கல்வி போத­னைக்­கா­கவே அர­சாங்­கம் தொலைக்­காட்சி ஒளிவழி­க­ளைத் தொடங்கி இருப்­ப­தா­க­வும் கூறி­னார்.

இணை­யம் வழி கற்­றலைத் தொடர்ந்து அர­சாங்­கம் மேம்­ப­டுத்தி வரும் என்­றும் மாநி­லத்­தில் பள்­ளிக்­கூ­டங்­களை கூடியவிரை­வில் திறக்க உரிய நேரத்­தில் பொருத்­த­மான முயற்­சி­கள் எடுக்­கப்­படும் என்­றும் அமைச்­சர் தெரி­வித்­தார்.

மாநி­லத்­தில் பள்­ளிக்­கூ­டங்­களைத் திறப்­ப­தன் தொடர்­பில் இப்­போது மருத்­துவ வல்­லு­நர்­க­ளின் கருத்­து­க­ளை­யும் கேட்க வேண்­டி இருப்­ப­தா­கக் குறிப்­பிட்ட அமைச்­சர், பொதுத் தேர்வு எழு­தும் மாண­வர்­க­ளுக்கு மட்­டும் முத­லில் பள்ளி களைத் திறப்­பது குறித்து பரி­சீ­லிக்­கப்­பட்டு வரு­வ­தா­கக் கூறி­னார்.

புத்­தக வெளி­யீட்டு விழா நிகழ்ச்­சி­யில் இஸ்ரோ அமைப்­பின் முன்­னாள் விஞ்­ஞானி சிவ­தா­ணுப்­பிள்ளை, முன்­னாள் அதி­பர் அப்­துல்­க­லா­மின் பேரன் ஷேக் தாவூத் முத­லா­னோர் கலந்­து­கொண்டு சிறப்­பித்­த­னர்.