அதிமுக உட்கட்சித் தேர்தல்; மீண்டும் மறைமுக போட்டி

1 mins read
eda35ea8-a9a1-4b63-a540-08d0773a4c0a
-

சென்னை: உட்­கட்­சித் தேர்­தல் நடை­பெற உள்­ளதை அடுத்து அதி­முக வட்­டா­ரங்­களில் மீண்­டும் பர­ப­ரப்பு நில­வு­கிறது.

கட்சி ஒருங்­கி­ணைப்­பா­ளர்­கள் எடப்­பாடி பழ­னி­சாமி, ஓ.பன்­னீர்­செல்­வம் ஆகிய இருவரின் ஆத­ர­வா­ளர்­கள் அதி­க­மான இடங்­களில் வெற்­றி­பெற வேண்­டும் எனும் முனைப்­போடு களப்­ப­ணி­யாற்­றத் தொடங்கி உள்­ள­னர்.

அதி­மு­க­வில் பல்­வேறு அமைப்பு­க­ளுக்­கான தேர்­தலை தாம­த­மின்றி நடத்த வேண்­டும் எனத் தேர்­தல் ஆணை­யம் அறி­வு­றுத்தி உள்­ளது.

முதற்­கட்­ட­மாக, அதி­முக அண்ணா தொழிற்­சங்­கப் பேர­வை­யின் அர­சுப் போக்­கு­வ­ரத்து கழக மண்­ட­லங்­கள், பணி­ம­னை­க­ளின் நிர்­வா­கி­கள் பொறுப்­பு­க­ளுக்­கான தேர்­தல் நடத்­தப்­பட உள்­ளது. இது தொடர்­பான அறி­விப்பை கட்­சித் தலைமை வெளி­யிட்­டதை அடுத்து, கொரோனா நெருக்­க­டிக்கு மத்­தி­யி­லும் தேர்­தல் களை­கட்­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இதை­ய­டுத்து கட்­சி­யின் பல்­வேறு அமைப்­பு­க­ளுக்­கான தேர்­தல்­கள் அடுத்­த­டுத்து நடை­பெற உள்­ளன. இவற்­றின் மூலம் கட்­சிப் பொறுப்­பு­க­ளைக் கைப்­பற்­று­வ­தில் பழ­னி­சாமி, பன்­னீர்­செல்­வம் ஆத­ர­வா­ளர்­கள் முனைப்பு காட்டி வரு­கின்­ற­னர்.

அதே­ச­ம­யம் எந்­த­வொரு கார­ணத்தை முன்­னிட்­டும் எதிர்த்­த­ரப்­பி­ன­ரு­டன் மோத­லில் ஈடு­ப­டு­வது, பகி­ரங்க குற்­றச்­சாட்­டு­களை முன்­வைப்­பது ஆகி­யவை தவிர்க்­கப்­பட வேண்­டும் என கட்­சித் தலைமை அறி­வு­றுத்தி உள்­ள­தா­கக் கூறப்­படு­கிறது.

இரு­த­ரப்­பை­யும் சேர்ந்த மாவட்ட செய­லா­ளர்­களும் நிர்­வா­கி­களும் உட்­கட்­சித் தேர்­த­லில் தங்­க­ளது ஆத­ர­வா­ளர்­க­ளைக் கள­மி­றக்கி வரு­கின்­ற­னர்.