சென்னை: முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் மூன்றாமாண்டு நினைவுதினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.
2018 ஆகஸ்ட் 7ஆம் தேதி கருணாநிதி காலமானார். அவரது நினைவுதினமான நேற்று, சென்னை மெரினா கடற்கரை அண்ணா நினைவிட வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, மகளிரணிச் செயலாளர் கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல் திருமாவளவன் நேற்று ஓர் அறிக்கையை வெளியிட்டார்.
அதில், "தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழியின் பாதுகாப்புக்காகவும் மேன்மைக்காகவும் அரும்பெரும் தொண்டாற்றிய கருணாநிதியின் நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயரில் தமிழகத்தில் மொழியியல் பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்க வேண்டும்," என்று தெரிவித்துள்ளார்.

