அதிமுக: பழிவாங்கும் நடவடிக்கை வேண்டாம்

அதிமுக: பழிவாங்கும் நடவடிக்கை வேண்டாம்

2 mins read
6a7f8283-b1a1-4de0-a746-e778a846874f
-

சென்னை: அதி­முக முன்­னாள் அமைச்­சர் எஸ்.பி.வேலு­ம­ணிக்கு சொந்­த­மான இடங்­களில் லஞ்ச ஒழிப்­புக் காவல்­து­றை­யி­னர் நேற்று அதி­ர­டிச் சோத­னை­யில் ஈடு­பட்டு வரு­வது அதி­மு­க­வின் முன்­னாள் அமைச்­சர்­க­ளைக் குறி­வைத்து பழி­வாங்­கும் நட­வ­டிக்கை என்று அதி­மு­க­வி­னர் கூறி­யுள்­ள­னர்.

இது­போன்ற பழி­வாங்­கும் நட­வ­டிக்­கை­களில் திமுக அரசு ஈடு­பட வேண்­டாம் என்று தமி­ழ­கத்­தின் முன்­னாள் முதல்­வர் பழ­னி­சா­மி­யும், முன்­னாள் துணை முதல்­வர் ஓ.பி. பன்­னீர்­செல்­வ­மும் கூட்­டாக வெளி­யி­டப்­பட்ட அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­துள்­ள­னர். "அனைத்­திந்­திய அண்ணா திரா­விட முன்­னேற்ற கழ­கத்­தின் அமைப்பு செய­லா­ளர், கோவை புற­ந­கர் தெற்கு மாவட்ட கழக செய­லா­ளர் சட்­ட­மன்ற எதிர்க்­கட்சி கொறடா முன்­னாள் அமைச்­சர் எஸ்.பி.வேலு­ம­ணிக்­குச் சொந்­த­மான இடங்­க­ளி­லும், அவ­ரு­டன் தொடர்­பில் இருப்­ப­வர்­கள் ஒரு சில­ரின் இடங்­க­ளி­லும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்­து­வ­தாக வரும் செய்­தி­கள், மக்­கள் நலப் பணி­களில் கவ­னம் செலுத்­தா­மல் திமுக அரசு, அதி­மு­க­வி­ன­ரைப் பழி­வாங்­கும் நட­வ­டிக்­கை­களில் அக்­கறை காட்­டு­கிறது என்ற ஐயப்­பா­டும் வருத்­த­மும் மன­தில் எழு­கின்­றன," என்று அந்த அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது. மேலும், "துடிப்­பான கழ­கச் செயல்­வீ­ரர் வேலு­மணி மீது பொய்க் குற்­றச்­சாட்­டு­கள் கூறப்­பட்டு சோதனை மேற்­கொண்­டுள்­ளது கண்­டிக்­க­தக்­கது என்று கரு­து­கி­றோம்.

"அதி­மு­க­வின் முன்­னாள் அமைச்­சர்­கள் மீது சுமத்­தப்­படும் குற்­றச்­சாட்­டு­கள் அனைத்­தை­யும் சட்ட ரீதி­யா­க­வும் அர­சி­யல் ரீதி­யா­க­வும் சந்­திக்க அதி­முக தயா­ராக உள்­ளது.

"ஆதா­ரம் ஏது­மின்றி ஊழல் பழி சுமத்­து­வது நியா­ய­மற்­றது," என்று அந்த அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யில் முன்­னாள் அமைச்­சர் ஜெயக்­கு­மார் கூறு­கை­யில், "திமுக அரசு காவல்­து­றை­யி­னரை ஏவி விட்டு அதி­மு­கவை களங்­கப்­ப­டுத்த முயற்சி செய்­கிறது. எங்­கள் மீதான குற்­றச்­சாட்­டுக்­களை தவறு என நீதி­மன்­றத்­தில் மெய்ப்­பிப்­போம்," என்று கூறி­யுள்­ளார்.