சென்னை: சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ரூ.811 கோடிக்கு ஒப்பந்தங்கள் போடுவதில் முறைகேடு நடைபெற்றதாக அளித்த புகாரின்பேரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட ஏழு பேர் மீதும் பத்து நிறுவனங்கள் மீதும் ஊழல், மோசடி உள்ளிட்ட ஏழு பிரிவு களில் லஞ்ச ஒழிப்பு போலி சார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவருடைய சகோதரர்களான அன்பரசன், செந்தில்குமார், நண்பர்களான சந்திரசேகர், சந்திரபிரகாஷ், மைத்துனர் சண்முகராஜா ஆகியோரது வீடுகள் உள்பட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்ட னர்.
இந்த நிலையில் டெண்டர் முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஎஸ்.பி. வேலுமணியின் வங்கி கணக்குகள் மற்றும் வங்கிப் பெட்டகங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலிசார் முடக்கியுள்ளனர்.

