வாலிபருக்கு ஐந்து சிறுநீரகங்கள்

வாலிபருக்கு ஐந்து சிறுநீரகங்கள்

1 mins read
b2bea12e-7310-4226-ac47-57b7f8cd4d78
-

சென்னை: சென்­னை­யில் உள்ள 41 வயது வாலி­பர் ஒரு­வ­ருக்கு மூன்று முறை அறுவை சிகிச்சை செய்­யப்­பட்­ட­தால் ஐந்து சிறு­நீர கங்­க­ளு­டன் நட­மாடி வரு­கி­றார்.

மெட்­ராஸ் மிஷன் மருத்­து­வ­மனையில் அவ­ருக்கு 3வது அறுவை சிகிச்சை செய்­யப்­பட்­ட­தாக 'நியூஸ்18' இணை­யத்­த­ளம் வெளி யிட்ட தகவல் தெரி­வித்­தது.

அப்­போது வாலி­ப­ருக்கு 5வது சிறு­நீ­ர­கம் பொருத்­தப்­பட்­டது.

அவ­ரது சொந்த இரு சிறுநீர­கங்­கள் தவிர 2வது அறுவை சிகிச்­சை­யில் இரண்டு சிறு­நீ­ர­கங்­கள் பொருத்­தப்­பட்­டன.

நான்கு சிறு­நீ­ர­கங்­க­ளின் செயல்­பாடு திருப்­தி­ய­ளிக்­கக்­கூ­டிய வகை­யில் இல்­லா­த­தால் கடை­சி­யாக ஜூலை 10ஆம் தேதி நடந்த அரி தான அறுவை சிகிச்­சை­யில் மற்றொரு சிறு­நீ­ர­கம் அவருக்குப் பொருத்­தப்­பட்­டது.

நரம்­பி­யல், அறுவை சிகிச்சை நிபு­ண­ரான டாக்­டர் சர­வ­ணன், அறுவை சிகிச்­சை­யின்­போது பல சவால்­களைச் சமா­ளிக்க வேண்­டி­யி­ருந்­த­தாக ஐஏ­என் எஸ்­ஸுக்கு அளித்த பேட்­டி­யில் கூறி­னார்.

"புதிய சிறு­நீ­ர­கம் பொருத்த போதுமான இடம் இருப்பதற்காக பழைய சிறுநீர­கங்­களை அகற்­றி­யி­ருக்­க­லாம். ஆனால் பெரு­ம­ளவு ரத்­தக்­க­சிவு ஏற்­பட்டு ரத்­த மாற்­றம் செய்ய வேண்­டி­யி­ருக்­கும்.

"மேலும் எதிர்ப்பு சக்தி அதி கரித்து புதிய சிறு­நீ­ர­கத்தை உடல் ஏற்­றுக்கொள்­ளா­மல் போக­லாம்," என்று அவர் விளக்­கி­னார்.

அந்த 41 வயது நோயா­ளிக்கு ஏற்­கெ­னவே உயர் ரத்த அழுத்­தப் பிரச்­சினை இருந்­தது. நாட்­பட்ட சிறு­நீ­ர­கப் பிரச்­சி­னை­யா­லும் அவர் அவ­திப்­பட்டு வந்­தார்.

வாலிபர் தற்போது தேறி வருவ தாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.