காவலில் இறந்த வாலிபர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு; போலிசிடம் வசூலிக்க உத்தரவு

காவலில் இறந்த வாலிபர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு; போலிசிடம் வசூலிக்க உத்தரவு

2 mins read
59dc07e2-a84d-4c89-b529-f18ebb948157
-

சென்னை: தூத்­துக்­குடி மாவட்­டம் சாத்­தான்­கு­ளத்­தைச் சேர்ந்த அருண் பரத், வயது 24 போலிஸ் விசா­ர­ணை­யின்­போது மர­ண­ம­டைந்­தார்.

இவ­ரது குடும்­பத்­துக்கு இழப் பீடாக ரூ. 5 லட்­சத்தை தமி­ழக அரசு வழங்க வேண்­டும் என்­றும் இந்­தத் தொகையை போலிஸ்­கா­ர­ரான ஸ்ரீகு­மா­ரி­டம் வசூ­லித்­துக் கொள்­ள­லாம் என்­றும் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

கடந்த 2006ஆம் ஆண்­டில் மிரட்­டல் புகார் குறித்து விசா­ரிப்­ப­தற்­காக அருண் பரத்தை

அப்­போ­தைய துணைக் காவல் ஆய்­வா­ளர் ஸ்ரீகு­மார் சாத்­தான் ­கு­ளம் போலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்­துச் சென்­றுள்­ளார்.

போலிஸ் நிலை­யத்­துக்­குச் சென்­ற­தும் வாக­னத்­தில் இருந்து இறங்­கிய அருண்­ப­ரத் மயங்கி விழுந்­தார். உட­ன­டி­யாக அவரை மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு சென்­ற­னர். ஆனால் அருண் பரத் ஏற்கெ­னவே இறந்­து­விட்­ட­தாக அங்கு தெரி­விக்­கப்­பட்­டது.

இந்த நிலை­யில் ஸ்ரீகு­மார் தாக்­கி­ய­தால்­தான் அருண்­ ப­ரத் இறந்து போன­தாகக் கூறி அதிகாரி மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று அருண் பரத்­தின் தந்தை டேவிட் இன்­ப­ராஜ், மனித உரிமை ஆர்­வ­லர்­கள் ராமச்­சந்­தி­ரன், ஹென்றி டிபேன் ஆகி­யோர் மாநில மனித உரிமை ஆணை­யத்­தில் வழக்­குத் தொடுத்­த­னர்.

இந்த வழக்கை விசா­ரித்த நீதி­பதி துரை. ஜெயச்­சந்­தி­ரன், "சாட்­சி­யம் மற்­றும் ஆவ­ணங்­களை வைத்துப் பார்க்­கும்­போது துணை ஆய்­வா­ளர் ஸ்ரீகு­மார் மனித உரிமை மீற­லில் ஈடு­பட்­டது தெரி­கிறது. அவ­ருக்கு எதி­ரான ஒழுங்கு நட­வ­டிக்கை விசா­ர­ணையை மூன்று மாதங்­களில் முடித்து இறுதி உத்­த­ரவு பிறப்­பிக்க டி.ஜி.பி.க்கு தமி­ழக அரசு அறி­வு­றுத்த வேண்­டும்," என்றார்.

மேலும் "அருண் பரத்­தின் தந்­தைக்கு தமிழக அரசு ரூ.5 லட்­சம் இழப்­பீ­டாக ஒரு மாதத்­தில் வழங்க வேண்­டும். இந்­தத் தொகையை காவலர் ஸ்ரீகு­மா­ரி­டம் இருந்து தமிழக அரசு வசூ­லித்­துக்­கொள்­ள­லாம்," என்று நீதி­பதி கூறி­யுள்­ளார்.