மும்பையில் டெல்டா பிளஸ் கிருமிக்கு முதல் நபர் பலி

மும்பையில் டெல்டா பிளஸ் கிருமிக்கு முதல் நபர் பலி

3 mins read
72c77890-1201-4f61-a727-5f3119fc6925
-

ஜே.பி.நட்டா: இந்தியா முழுவதும் 50 கோடி தடுப்பூசி போட்டு வரலாற்றுச் சாதனை

63 வயது மாது இரு முறை

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்

மும்பை: மும்பை நக­ரில் உரு­மா­றிய டெல்­டா ­பி­ளஸ் கிரு­மிக்கு முதல் நபர் ஒரு­வர் பலி­யா­கி­யுள்­ளார்.

கடந்த ஜூலை மாதம் இறு­தி­யில் அந்த 63 வயது மாது உயி­ரி­ழந்­த­தாக கூறிய மர­பணு வரி­சை­ஆய்­வகம், டெல்­டா­ பி­ளஸ் கிரு­மி­யால் அவர் பாதிக்­கப்­பட்­டி­ருந்­ததை புதன்­கி­ழமை அன்று உறுதி செய்­தது.

அந்த மாது முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டி­ருந்­தார். ஆனால் அவ­ருக்கு நுரை­யீ­ரல் நோய் இருந்­துள்­ளது.

மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தில் டெல்­டா­ பி­ளஸ் கிரு­மிக்கு பலி­யா­ன­வர்­களில் இவர் இரண்­டா­வது நபர் என்று 'த டைம்ஸ் இந்தியா' தெரி வித்தது.

தற்­போது மாநி­லம் முழு­வ­தும் 65 பேர் டெல்­டா ­பி­ளஸ் கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­களில் 11 பேர் மும்பை நக­ரைச் சேர்ந்­த­வர்­கள்.

"இத­னால் அஞ்­சத் தேவை­யில்லை. ஆனால் முகக்­க­வ­சத்தை தொடர்ந்து அணிய வேண்­டும். தனி­ந­பர் இடை­வெ­ளியை தவ­றா­மல் கடைப்­பி­டிக்க வேண்­டும்," என்று மும்பை மாந­க­ராட்­சி­யின் சுகா­தார அதி­கா­ரி­யான டாக்­டர் மங்­கல கொமாரே தெரி­வித்­தார்.

ஜூலை 21ஆம் தேதி மாதுக்கு டெல்­டா­பி­ளஸ் தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டது. கடைசி மூன்று நாட்­கள் அவர் தீவிர சிகிச்சை பிரி­வில் சிகிச்சை ெபற்று வந்தார். ஜூலை 27ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவ­ரு­டன் நெருக்­க­மாக இருந்­த­வர்­களில் ஆறு பேருக்­குத் தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

"தொடர்­பில் இருந்­த­வர்­க­ளின் மாதி­ரி­கள் சேரிக்­கப்­பட்டு மர­பணு வரிசை ஆய்­வ­கத்­துக்கு அனுப்­பப்­பட்­டுள்ளன. இதில் இரு­வர் டெல்­டா­பி­ளஸ் கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­டது தெரிந்­தது. எஞ்­சிய முடி­வு­கள் இன்­னும் வர­வில்லை," என்று டாக்­டர் மங்­கல கொமேரே கூறி­னார்.

டெல்­டா­பி­ளஸ் கிரு­மிக்­குப் பலி­யா­ன­வ­ருக்கு ஏற்­கெ­னவே நுரை­யீ­ரல் நோய் இருந்­துள்­ள­தால் வீட்­டி­லேயே உயிர்­வாயு சிகிச்சை பெற்று வந்­த­தாக அவர் சொன்னார்.

அந்த மாதுக்கு இரு முறை கொவி­ஷீல்ட் தடுப்­பூசி போடப்பட்­டுள்­ளது.

அதி­வே­கத்­தில் பர­வும் டெல்டா கிரு­மி­யி­லி­ருந்து டெல்­டா ­பி­ளஸ் கிருமி உரு­மா­றி­யுள்­ளது. இவ் வாண்டு முற்­ப­கு­தி­யில் மகா­ராஷ்­டிராவில் அந்த கிருமி அடை­யா­ளம் காணப்­பட்­டது.

இதற்­கி­டையே வியா­ழக்­கி­ழமை அன்று அம்­மா­நி­லத்­தில் கொவிட்-19 சம்­ப­வங்­கள் சற்று அதி­க­ரித்­துள்­ளன.

கடந்த ஒரு வாரத்­தில் ஆக அதி­க­மாக வியாழக்கிழமை அன்று 6,388 சம்­ப­வங்­கள் தொற்றுச் சம்ப வங்கள் பதிவாகின. தொற்­றுக்­குப் பலி­யா­ன­வர்களின் எண்­ணிக்­கை­யும் 200க்கு அதி­க­ரித்­துள்­ளது.

மும்பை நக­ரத்­தில் தொடர்ந்து 300 சம்­ப­வங்­கள் பதி­வாகி வரு கின்­றன.

இந்த நிலை­யில் இந்­தியா முழு வதும் 50 கோடி (500 மி.) பேருக்­குத் தடுப்­பூசி போடப்பட்டு வர லாற்றுச் சாதனை படைக்­கப்­பட்டு உள்­ள­தாக பா.ஜ.க தேசிய தலை­வர் ஜே.பி. நட்டா தனது கட்டுரை ஒன்றில் தெரி­வித்து உள்­ளார்.

கடந்த மாதம் 7ஆம் தேதி அந்­தச் சாதனை எட்­டப்­பட்­டது என்று கூறி­ய திரு ஜே.பி.நட்டா, கடி­ன­மானச் சூழல் மற்­றும் எதிர்மறை­யான பிர­சா­ரங்­கள் மேற்கொண்­ட­போ­தி­லும் இந்­தியா அதனை சமா­ளித்து, பெரிய அள­வில் வேக­மா­க­தடுப்­பூசித் திட்­டத்தை திற­மை­யாக செயல்படுத்­தி­யுள்­ளது என்­றார்.

"புகழ் அனைத்­தும் பிர­த­மர் நரேந்­திர மோடிக்­குத்­தான். கொரோ­னா­வுக்கு எதி­ரான போரா­ளி­கள், மருத்துவர்கள், விஞ்­ஞா­னி­கள் மற்­றும் மருத்­துவ ஊழி­யர்­களின் விடா­மு­யற்சி, துணிவு மற்­றும் அர்ப்­ப­ணிப்­பு­டன் பணி­யாற்­றி­ய­தால்­தான் இது சாத்­தி­ய­மா­னது," என்று திரு நட்டா குறிப்பிட்டார்.

உல­கத்­தி­லேயே மிகப்­பெ­ரிய அள­வி­லான தடுப்­பூசி போடும் திட்­டத்தை கடந்த ஜன­வரி 16ஆம் தேதி பிரதமர் நரேந்­திர மோடி தொடங்கி வைத்­தார்.