எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுகிறார் சோனியா

எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுகிறார் சோனியா

2 mins read
1fbbf430-f842-47d8-b152-0a28d9c81ced
-

புது­டெல்லி: இந்­திய எதிர்க்­கட்­சி­கள் பல்­­வேறு பிரச்­சி­னை­களை எழுப்பி ெதாடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் இரு அவை­க­ளின் நட­வ­டிக்­கை­கள் ஏறக்­கு­றைய 80 விழுக்­காடு பாதிக்கப்பட்டன.

பெகா­சஸ் உளவு விவ­கா­ரம் தொடர்­பாக விவா­திக்க வேண்­டும் என்று அனைத்து எதிர்க்­கட்­சி­களும் நாடா­ளு­மன்­றத்­தில் ஓர­ணி­யில் திரண்டு போரா­டி­னர். இதனால் ஆளும் பார­திய ஜனதா கட்சி திண­றும் சூழ்­நி­லைக்கு தள்­ளப்­பட்­டது. இதைப்­பு­ரிந்து கொண்­டுள்ள காங்­கி­ரஸ் கட்சி தொடர்ந்து எதிர்க்­கட்­சி­களை ஓர­ணி­யில் தக்க வைக்­கும் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கிறது.

இந்நிலையில் காங்­கி­ரஸ் கட்­சி­ யின் டுவிட்­டர் கணக்­கு­கள் முடக்­கப்­பட்­ட­ட­தால் அக்கட்சியின் மூத்த தலை­வர்­கள் மேலும் ஆத்­தி­ரம் அடைந்­துள்­ளனர்.

இந்தச் சூழ்நிலையில் நாடு முழு­வ­தும் உள்ள எதிர்க்­கட்­சி­களை ஒன்று திரட்டி ஓர­ணிக்­குள் கொண்டு வரும் முயற்­சி­களை காங்­கி­ரஸ் தலை­வர் சோனியா தொடங்­கி­யுள்­ளார்.

காங்­கி­ரஸ் ஆளும் மாநில முதல்­வர்­கள் தவிர பார­திய ஜனதா அல்­லாத மற்ற மாநில முதல்­வர்­களை தங்­க­ளுக்கு ஆத­ர­வாக கொண்டு வரும் முயற்­சி­களை சோனியா எடுத்து வரு­கி­றார். இதற்­காக வரும் 20ஆம் தேதி நாடு முழு­வ­தும் உள்ள எதிர்க்­கட்சித் தலை­வர்­க­ளி­டம் சோனியா பேச திட்­ட­மிட்டு உள்­ளார்.

மெய்­நி­கர் வழி­யாக அனைத்து எதிர்க்­கட்சித் தலை­வர்­க­ளை­யும் அன்று சோனியா தொடர்பு கொள்­வார் எனத் தெரி­கிறது.

மேற்கு வங்­காள முதல்­வர் மம்தா பானர்ஜி, மராட்­டிய முதல்­வர் உத்­தவ் தாக்­கரே, தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் ஆகி­யோரை இந்த ஆலோ­சனைக் கூட்­டத்­தில் பங்­கேற்க வைக்க முயற்­சி­கள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய வாத காங்­கி­ரஸ் தலை­வர் சரத்­ப­வார். ஜார்க்­கண்ட் முதல்­வர் ஹேமந்த் சோரன், கம்­யூ­னிஸ்ட் தலை­வர்­கள் டி.ராஜா, சீதா­ராம் யெச்­சூரி ஆகி­யோ­ருக்­கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­கிறது. நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்க்­கட்சி­க­ளின் போராட்ட உணர்வை பார­திய ஜன­தா­வுக்கு எதி­ராக திருப்ப சோனியா நாடு­ மு­ழு­வ­தும் உள்ள முக்­கிய தலை­வர்­களை ஒன்று திரட்­டு­வ­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.