'வீடு இல்லாதவர்களுக்கு வீடு; 2 லட்சம் வீடுகள் கட்டப்படும்'

'வீடு இல்லாதவர்களுக்கு வீடு; 2 லட்சம் வீடுகள் கட்டப்படும்'

2 mins read
01aa4d6e-8695-43b6-aa43-26c25e6189de
முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் உள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வெளிநாட்டில் வசிக்கும் தமி­ழர்­க­ளு­ட­ன் உறவு வலுப் படுத்தப்படும் என்று கூறி உள்ளார். படம்: மாலை மலர் -

சென்னை: தமி­ழக நிதி அமைச்­சர் பி.டி.ஆர்.பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன், கிரா­மப்­பு­றங்­களில் வீடு இல்­லாத 8.03 லட்­சம் பேருக்கு ஐந்து ஆண்டு களில் வீடு­கள் கட்­டித் தரப்­படும் என்று வரவு செலவுத் திட்ட அறி­விப்­பில் கூறி­யுள்­ளார்.

அந்த வகை­யில் கிரா­மப்­புற வீட்டு வசதி திட்­டத்­துக்கு ரூ.3,548 கோடி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக அவர் தெரி­வித்­தார்.

"கலை­ஞர் பெய­ரில் நமக்கு நாமே திட்­டம் 100 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் செயல்­ப­டுத்­தப்­படும். அதே­போல் ஆயிரம் கோடி­ ரூபாயில் கலை­ஞர் நகர்ப்­புற மேம்­பாட்டு திட்­டம் செயல்­ப­டுத்­தப்­படும். ஒரு லட்­சத்­துக்­கும் அதி­க­மான மக்­கள் தொகை கொண்ட 27 நக­ரங்­களில் பாதா­ளச் சாக்­கடைகள் அமைக்கப் படும். அடுத்த 10 ஆண்­டு­களில் 1,000 தடுப்­ப­ணை­கள், கத­வ­ணை­கள் கட்­டப்­படும்.

"தொல்­லி­யல் துறைக்கு ரூ.29.43 கோடி நிதி ஒதுக்­கப்­படும். சிங்­கார சென்னை 2.0 திட்­டம் தொடங்­கப்­படும். 'ஸ்மார்ட் சிட்டி' திட்­டத்­துக்கு ரூ.2,350 கோடி நிதி ஒதுக்­கப்­படும்.சென்­னை­யில் மூன்று இடங்­களில் புதிய மேம்­பா­லங்­கள் கட்ட ரூ.500 கோடி நிதி ஒதுக்­கப்­பட்டு உள்­ளது.

"பள்ளிக் கல்­விக்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­கும் வித­மாக ரூ.32,599.54 கோடி ­நிதி ஒதுக்­கீடு, மதுரை, கோவை, திருப்­பூர், ஓசூர் பகு­தி­களில் புதிய பெரு­ந­கர வளர்ச்­சிக்­கு­ழு­மங்­கள் ஏற்­ப­டுத்­தப்­படும்.

"413 கல்வி ஒன்­றி­யங்­க­ளுக்கு தலா 40 தொடு­திரை கைய­டக்க கணி­னி­கள் ரூ.13.22 கோடி­யில் வழங்­கப்­படும். உயர் கல்­வித் ­துறைக்கு ரூ.5,369.09 கோடி நிதி ஒதுக்கப்படும்.

"நடப்­பாண்­டில் தமி­ழ­கத்­தில் புதி­தாக 10 கலை, அறி­வி­யல் கல்­லூ­ரி­கள் தொடக்­கப்­படும். 25 கலை, அறி­வி­யல் கல்­லூ­ரி­களில் ஸ்மார்ட் வகுப்­ப­றை­கள் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்­கீடு. அண்ணா பல்­க­லைக்­க­ழ­கத்­து­டன் இணைந்து தமிழ்­நாடு ஆளில்லா விமா­னக் கழ­கம் உரு­வாக்­கப்­படும்.

"மருத்­து­வம் மற்­றும் குடும்­ப ­நலத்­து­றைக்கு மொத்­தம் ரூ.18,933.20 கோடி நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. அதிக அள­வி­லான முத­லீ­டு­களை ஊக்­கு­விக்க புலம்­பெ­யர் தமி­ழர்­க­ளு­ட­னான உறவு வலுப்படுத்­தப்­படும். சுற்­று­லாத் ­துறைக்கு ரூ.187.59 கோடி நிதி ஒதுக்­கப்பட்­டுள்­ளது என்றார்.

புதிய வர­வு­செ­ல­வுத் திட்­டம் இந்த நிதி ஆண்­டின் எஞ்­சிய காலத்­திற்­குப் பொருந்­தும் என்று குறிப்­பிட்ட அவர், நடப்பு நிதி­யாண்­டின் வரு­வாய் ரூ.2,60,409.26 கோடி என்று மதிப்­பி­டப்­பட்­டுள்­ள­தாகவும் செல­வி­னம் ரூ.319,101.26 கோடி­யாக இருக்­கும் என்றும் 2021-2022ஆம் ஆண்டு நிதிப்பற்­றாக்­குறை ரூ.58,692 கோடி­யாக இருக்­கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.