கேரளா, கர்நாடகாவில் இருந்து தமிழகம் வந்தால் கொரோனா சான்றிதழ் கட்டாயம்

கேரளா, கர்நாடகாவில் இருந்து தமிழகம் வந்தால் கொரோனா சான்றிதழ் கட்டாயம்

1 mins read
9a51794c-2660-4381-9c37-b2e591526b73
-

நீல­கிரி: தமி­ழ­கத்­தின் அண்டை மாநி­ல­மான கர்­நா­டகா, கேர­ளா­வில் இருந்து வரும் அனை­வ­ரும் கொரோனா பரி­சோ­தனை செய்து கொண்­ட­தற்­கான சான்­றி­தழ் வைத்­தி­ருப்­பது கட்­டா­யம் என அறிவிக்­கப்­பட்­டுள்­ளது.

மாநில எல்­லை­யில் சான்­றி­தழ் சரி­பார்க்­கப்­படும் என்­றும் அதன் பிறகே பொது­மக்­களும் சுற்­றுலாப் பய­ணி­களும் தமி­ழ­கத்­துக்­குள் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

அண்­மைய சில தினங்­க­ளாக கேர­ளா­வில் கொரோனா தொற்­றுப் பாதிப்பு தொடர்ந்து அதி­க­ரித்த வண்­ணம் உள்­ளது. கர்­நா­ட­கா­வைப் பொறுத்­த­வரை பாதிப்பு எண்­ணிக்கை ஏற்ற இறக்­க­மாக இருந்து வரு­கிறது.

தமி­ழ­கத்­தில் தொற்­றுப்­ப­ர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­கள் தீவி­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்­ட­தால் பாதிப்பு வெகு­வாக குறைந்­துள்­ளது. இந்­நி­லை­யில், அண்டை மாநி­லத்­தில் இருந்து தின­மும் தமி­ழ­கம் வரும் ஆயி­ரக்­க­ணக்­கான பொது­மக்­க­ளால் மீண்­டும் தொற்று எண்­ணிக்கை அதி­க­ரித்­து­வி­டக் கூடாது என்­ப­தில் அரசு கவ­ன­மாக உள்­ளது. குறிப்­பாக, கேரளா, கர்­நா­ட­கா­வின் எல்­லை­யில் அமைந்­துள்ள நீல­கிரி மாவட்­டத்­துக்கு நாள்­தோ­றும் ஏராள­மா­னோர் வருகை தரு­கின்­ற­னர்.

இதை­ய­டுத்து அப்­ப­கு­தி­யில் கொரோனா கட்­டுப்­பா­டு­கள் அதி­க­ரித்­துள்­ளது. இரு தவணை தடுப்­பூசி போட்­டுக்கொண்­ட­வர்­க­ளுக்கு மட்­டுமே நீல­கி­ரி­யில் நுழைய அனு­மதி அளிக்­கப்­ப­டு­கிறது.

இதே­போல், தமி­ழக-கர்­நா­டக எல்­லை­யில் உள்ள கக்­க­நல்லா சோத­னைச்­சா­வடி, தமி­ழக-கேரள எல்­லை­யில் உள்ள நாடு­காணி உட்­பட மாநில எல்­லை­யில் உள்ள அனைத்து சோத­னைச்­சா­வ­டி­களி­லும் சான்­றி­தழ் பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது.