மேம்பட்ட தமிழகம்: மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

மேம்பட்ட தமிழகம்: மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

2 mins read
4cdced42-f79e-4e07-af5a-97baa01e940f
சென்னை கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். படம்: தமிழகத் தகவல் ஊடகம் -

'சமூக நீதி கொண்ட மாநிலமாக தமிழகத்தை உயர்த்த வேண்டும்'

சென்னை: தமிழ்ச் சமூ­க­மா­னது சிந்­த­னை­யால், பண்­பாட்­டால், நாகரி­கத்­தால், பழக்­க­வ­ழக்­கத்­தால் உயர்­வ­டைய வேண்­டும் என்­றும் ஏற்­றத்­தாழ்வு அற்ற ஒரு­ம­னித உரி­மைச் சமூ­க­மாக மாற­வேண்­டும் என்­றும் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

மேலும், மேம்­பட்ட தமிழ்­நாட்டை உரு­வாக்க நினைக்­கும் தமி­ழக அர­சுக்கு மக்­கள் உறு­து­ணை­யாக இருக்க வேண்­டும் என்­றும் அவர் கேட்­டுக்கொண்­டுள்­ளார்.

நாட்­டின் 75ஆவது சுதந்­திர தினத்­தை­யொட்டி சென்னை கோட்டை கொத்­த­ளத்­தில் முதல்­வர் ஸ்டா­லின் நேற்று தேசி­யக் கொடியை ஏற்றி வைத்­தார்.

திமுக ஆட்­சிப் பொறுப்­பேற்று நேற்­று­டன் சரி­யாக 101 நாள் முடி­வ­டைந்­தது. இந்­நி­லை­யில், முதன்­மு­றை­யாக சென்னை கோட்­டை­யில் கொடி­யேற்றி வைத்து அவர், தமது சுதந்­திர தின உரையை நிகழ்த்­தி­னார்.

அப்­போது, அனை­வ­ருக்­கும் சம­மான உரி­மை­களை அளிக்­கும் சமூக நீதி கொண்ட மாநி­ல­மாக தமி­ழ­கத்தை உயர்த்த வேண்­டும் என அவர் வலி­யு­றுத்­தி­னார்.

இந்­திய விடு­தலைப் போராட்­டத்­திற்­கான விதை தமி­ழகத்­தில்­தான் போடப்­பட்­டது என்­றும் பூலித்­தேவன் தொடங்கி பெரி­யார் வரை பல தலை­வர்­கள் சுதந்­தி­ரத்­திற்­காக போரா­டி­னார்­கள் என்­றும் முதல்­வர் நினை­வு­கூர்ந்­தார்.

"தமிழ்­நாட்டுத் தியா­கி­க­ளின் மூச்­சுக் காற்று மூலமே இந்­தி­யா­வின் சுதந்­தி­ரம் கட்டி எழுப்­பப்­பட்­டது. அவர்­க­ளின் போராட்­டம்­தான் இந்­திய சுதந்­தி­ரப் போராட்­டத்­திற்கு தூணாக இருந்­தது.

"இந்­திய சுதந்­தி­ரப் போராட்­டத்­தில் தமி­ழர்­க­ளின் பங்­க­ளிப்பு குறித்த ஆவ­ணம் உரு­வாக்­கப்­படும். முறை­யான ஆவ­ணத்தை இதற்­காக உரு­வாக்கி தமி­ழக அரசு வெளி­யி­டும். விடு­த­லைப் போராட்­டத் தியா­கி­க­ளுக்­கான ஓய்­வூ­தி­யம் 17 ஆயி­ரத்­தில் இருந்து 18 ஆயி­ரம் ரூபா­யாக உயர்த்­தப்­ப­டு­கிறது," என்­றார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.

சுதந்­தி­ரப் போராட்ட தியா­கி­க­ளைப் போற்­று­வ­தில் திமுக முன்­னிலை வகித்து வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், வ.உ. சிதம்­ப­ர­னா­ரின் 150ஆவது பிறந்த நாள் அரசு சார்­பில் எழுச்­சி­யோடு கொண்­டா­டப்­படும் என்­றார்.

"தமி­ழக முதல்­வ­ராக நான் பதவி ஏற்று 101 நாட்­கள் ஆகி­விட்­டது. அர­சின் நிதி­நிலை அறிக்கை, வெள்ளை அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. மக்­களைப் பாது­காக்க பல நட­வ­டிக்­கை­களை அரசு எடுத்­துள்­ளது.

"ஆட்­சிப் பொறுப்­புக்கு வந்த முதல் நாளில் இருந்தே கொரோனாவைக் கட்­டுப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­க­ளை ­அ­ரசு துரி­த­மாக மேற்­கொண்டு வரு­கிறது," என்­றார் முதல்­வர் ஸ்டா­லின்.

சாதி, மதம், இனம் குறித்த சவால்­களை எதிர்­கொண்டு இருக்­கும் இந்­தி­யா­விற்கு 'காந்தி' என்ற ஆயு­தம்­தான் ஒரே வழி என்று குறிப்­பிட்ட அவர், காந்­தி­யின் பண்­பு­களை இளை­யர்­க­ளி­டம் கொண்டு செல்ல வேண்­டும் என்­றார்.

காந்தி தமிழ் மொழி­யின் மீது மிகுந்த விருப்­பம் கொண்டு இருந்­தார் என்­றும் அவ­ரது மேலாடை துறப்­பிற்கு தமி­ழ­கம்­தான் கார­ண­மாக இருந்­தது என்­றும் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் மேலும் குறிப்­பிட்­டார்.