நடிகை மீரா மிதுன் கைது: சென்னையில் விசாரணை

நடிகை மீரா மிதுன் கைது: சென்னையில் விசாரணை

1 mins read
3de9856d-350f-46bf-b725-0fb9caf5f757
மீரா மிதுன். படம்: ஊடகம் -

சென்னை: கேர­ளா­வில் கைது செய்­யப்­பட்ட நடிகை மீரா மிதுன் விசா­ர­ணைக்­காக சென்­னைக்கு அழைத்து வரப்­பட்­ட­தாக காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

நேற்று காலை சென்­னை­யில் உள்ள காவல்­துறை ஆணை­யர் அலு­வ­ல­கத்­தில் வைத்து அவ­ரி­டம் விசா­ரணை நடந்­தது.

அண்­மை­யில் பட்­டி­ய­லி­னத்­த­வர்­கள் குறித்து அவ­தூ­றான கருத்து­களை வெளி­யிட்­ட­தாக மீரா மிதுன் மீது புகார்­கள் எழுந்­தன. இதை­ய­டுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்­யப்­பட்­டது.

தம்­மைக் கைது செய்ய வாய்ப்பு இருப்­பதை அறிந்த மீரா மிதுன், கேரளா புறப்­பட்­டுச் சென்­றார். அங்கு நட்­சத்­திர தங்­கும் விடு­தி­யில் அவர் தங்­கி­யி­ருப்­பதை அறிந்த போலி­சார், நேர­டி­யாக அங்கு சென்று அவ­ரைக் கைது செய்­த­னர்.

இதன் பின்­னர் மீரா மிதுன் சென்­னைக்கு அழைத்து வரப்­பட்டு, அவ­ரி­டம் தொடர் விசா­ரணை நடத்­தப்­பட்டு வரு­கிறது.

முன்­ன­தாக, கைது நட­வ­டிக்­கை­யின்­போது போலி­சா­ரி­டம் அவர் கடும் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­டார். மேலும், அதை காணொ­ளி­யா­கப் பதிவு செய்து சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யிட்­டார்.

"பெண்­கள் என்­றால் இப்­ப­டித்­தான் கைது செய்து கொடு­மைப்­ப­டுத்த வேண்­டுமா? பிர­த­மர், முதல்­வர் இரு­வ­ரும் இதைப் பார்க்­கட்­டும். தமி­ழக போலி­சார் என்­னைக் கொடு­மைப்­ப­டுத்­து­கி­றார்­கள்," என்று மீரா கண்­ணீர் சிந்தியபடி உரக்கப் பேசுவது அந்தக் காணொ­ளி­யில் பதி­வாகி உள்­ளது.

சென்­னை­யில் நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­யின்­போது, பட்­டி­ய­லி­னத்­த­வர்­கள் குறித்து அவர் இழி­வா­கப் பேசி­யது தொடர்­பான காணொ­ளிப்­ப­திவை ஆதா­ர­மாக வைத்து விளக்­கம் கேட்­கப்­பட்­டதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.