நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம்

நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம்

1 mins read
3a2180e1-ef85-474a-94db-94075ea09404
-

சென்னை: நம்­மாழ்வாா் பெய­ரில் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் அமைக்­கப்­படும் என தமி­ழக அரசு அறி­வித்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் சட்­டப்­பே­ர­வை­யில் தாக்­கல் செய்­யப்­பட்ட வேளாண் நிதி­நிலை அறிக்­கை­யில் இந்த அறி­விப்பு இடம்­பெற்­றி­ருந்­தது.

பல்­வேறு பயிா்களில் இயற்கை வேளாண்மை தொடா்பான ஆராய்ச்­சிப் பணி­களை மேற்­கொள்­வ­தற்கு கோவை­யில் வளங்­குன்றா வேளாண்­மைக்­கான துறை இயங்கி வரு­கிறது.

அது மேம்­ப­டுத்­தப்­பட்டு 'நம்­மாழ்வாா் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்' எனப் பெயா் மாற்­றம் செய்­யப்­படும் என்­றும் முதல்­கட்­ட­மாக மூன்று கோடி ரூபாய் மாநில அரசு நிதி­யாக ஒதுக்­கீடு செய்­யப்­படும் என்­றும் தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.

இந்த புதிய மைய­மா­னது தமிழ்­நாடு வேளாண்­மைப் பல்­க­லைக்­க­ழக வளா­கத்­தில் அமைக்­கப்­ப­டு­ம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.