ஆர்.பி. உதயகுமார்: வரவு செலவு அறிக்கை பூனை எலியைக் கவ்வுவது போல் உள்ளது முதல்வர்: வாக்குறுதிகளைச் சொன்னபடி நிறைவேற்றுவோம்

ஆர்.பி. உதயகுமார்: வரவு செலவு அறிக்கை பூனை எலியைக் கவ்வுவது போல் உள்ளது முதல்வர்: வாக்குறுதிகளைச் சொன்னபடி நிறைவேற்றுவோம்

2 mins read
81aa4cce-9910-483d-b9c2-14c801b9a9ab
-

சென்னை: தேர்­தல் சம­யத்­தில் அள்ளி வீசிய வாக்­கு­று­தி­களை முறைப்­படி நிைறவேற்­றா­மல் ஆட்­சிக் கட்­டி­லில் அமர்ந்­துள்ள திமுக மக்­களை வஞ்­சித்து வரு­வ­தாக எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் தொடர்ந்து குற்­றம்­சாட்டி வரும் நிலை­யில், "கொடுத்த வாக்­கு­று­தி­யில் இருந்து என்­றைக்­கும் பின்­வாங்­க­மாட்­டோம். சொன்­னதை சொன்­ன­படி நிச்­ச­யம் நிறை­வேற்று வோம்," என்று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழக சட்­டப்­பே­ர­வை­யில் பொது, வேளாண் துறைக்­கான வரவு செல­வுத் திட்­டம் மீதான விவா­தம் நேற்று காலை தொடங்­கி­யது. இவ்­வி­வா­தம் வரும் 19ஆம்­தேதி வரை நடை­பெற உள்­ளது.

இந்­நி­லை­யில், விவா­தத்­தின் போது, எதிர்க்­கட்சி உறுப்­பி­னர் ஆர்.பி. உத­ய­கு­மார், "திமுக ஆட்­சிக்கு வந்து நூறு நாட்­கள் ஆகி­யும் இன்­னும் ஏன் விவ­சா­யக் கடன்­கள், நகைக் கடன்­கள் ரத்து செய்­யப்­ப­ட­வில்லை? தேர்­தல் வாக்­கு­று­தி­களில் இருந்து பின்­வாங்­கு­வ­தற்­கா­கவே வெள்ளை அறிக்கை வெளி­யி­டப்­பட்­டதா?" என கேள்வி எழுப்­பி­னார்.

"மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அர­சாங்­கம், எந்த ஓர் அறிக்கை யையும் தயார் செய்­யும்­போது, தாய்ப் பூனை குட்­டிப் பூனையை வாயில் கவ்­விச் செல்­வது போல் தாய்ப் பாசத்­தோடு இருக்­க­வேண்­டும்.

"ஆனால், தற்­போது தாக்­கல் செய்­யப்­பட்­டுள்ள வரவு செல­வுத் திட்ட அறிக்கை பூனை எலி­யைக் கவ்­விச் செல்­வது போல் உள்­ளது," என விமர்­சித்து உள்­ளார்.

உத­ய­கு­மா­ருக்குப் பதி­ல­ளித்த முதல்­வர், "கடந்த 2016 தேர்­த­லில் கூறப்­பட்ட அதி­முக தேர்­தல் வாக்­கு­று­தி­கள் அனைத்­தும் நிறை­வேற்­றப்­பட்­டதா என்று கேட்டது­டன், இல­வச கைபேசி, பொது இடங்­களில் வைஃபை வசதி, மோனோ ரயில் திட்­டம், பட்டு ஜவு­ளிப் பூங்கா உள்­ளிட்ட பல வாக்­கு­று­தி­களை அதி­முக நிறைவேற்­ற­வில்லை," என பட்டியலிட்டார்.

கடந்த ஆட்­சி­யில் அவ­ச­ர­க­தி­யில் தள்­ளு­படி செய்­யப்­பட்ட பயிர்க் ­க­டன், நகைக்­க­ட­னில் முறை­கேடு­கள் நடந்­துள்­ள­தா­க­வும் இவை சரி­செய்­யப்­பட்டு, நகைக்­க­டன்­களும் பயிர்க் கடன்­களும் நிச்­ச­யம் தள்­ளு­படி செய்­யப்­படும் என்றார்.

"திமுக தனது தேர்­தல் வாக்­கு­று­தி­யில் சொன்­ன­தை­யும் செய்து வரு­கிறது, அதேபோல் சொல்­லா­த­தை­யும் செய்து வரு­கிறது. 14 வகை மளி­கைப் பொருள்­கள் தொகுப்பு தேர்­தல் வாக்­கு­று­தி­யில் குறிப்­பி­டப் படா­தது. திமு­க­வின் தேர்­தல் வாக்­கு­று­தி­கள் அனைத்­தும் நிறை­வேற்­றப்­படும்," என்­றார்.

இத­னி­டையே, விவா­தத்­தின்­போது குறுக்­கிட்டுப் பேசிய எதிர்க்­கட்­சித் தலை­வர் பழ­னி­சாமி, நில­மில்­லாத எத்­தனை பேருக்கு நிலம் வழங்­கப்­பட்­டுள்­ளது என கேட்டார்.

அதற்கு பதி­ல­ளித்த கூட்­டு­ற­வுத்­துறை அமைச்­சர் ஐ.பெரி­ய­சாமி, இரண்­டரை லட்­சம் ஏக்­கர் நிலங்­களை ஏழை எளிய மக்­க­ளுக்கு பிரித்­துக் கொடுத்­தது திமுக அரசு­தான் என சுட்­டிக்­காட்­டி­னார்.

இதற்­கி­டையே, கடந்த ஆட்­சிக் காலத்­தில் தகுதியான லட்­சக் கணக்­கான நபர்களுக்கு முறை­யாக முதி­யோர் உத­வித்­தொகை வழங்­கப்­ப­ட­வில்லை என நிதி­ய­மைச்­சர் பழ­னி­வேல் தியாகராஜனும் குற்­றம்­சாட்டை முன்வைத்தார்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட திட்டங்கள் அனைத்தும் வெற்று வாக்குறுதிகள் அல்ல. அவை நிச்சயம் நிறைவேற்றப்படும். எங்கள் நிதிநிலைமையைக் காரணம் காட்டி தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து திமுக அரசு ஒருபோதும் பின்வாங்காது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்