'கூட்டணி சேராமல் ஆட்சியைப் பிடிப்பதுதான் பாமகவின் இலக்கு'

'கூட்டணி சேராமல் ஆட்சியைப் பிடிப்பதுதான் பாமகவின் இலக்கு'

2 mins read
f645b7b3-9d2a-457a-b187-f6d0394068fc
-

சென்னை: அடுத்த சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதி­மு­க­வு­டன் கூட்­டணி அமைக்­கும் எண்­ணம் இல்லை. ஆனால், நவம்­பர் அல்­லது டிசம்­பர் மாதத்­தில் நடைபெற உள்ள உள்­ளாட்­சித் தேர்­த­லில் அதி­மு­க­வுடன் எங்­க­ளது கூட்­டணி தொட­ரும் என்று பாமக நிறு­வ­னர் மருத்­து­வர் ராம­தாஸ் (படம்) தெரி­வித்­து உள்­ளார்.

"நாங்­கள் உள்­ளாட்­சித் தேர்­த­லுக்கு இப்போதே ஆயத்­த­மாகத் தான் உள்­ளோம். 2026 சட்­ட­மன்­றத் தேர்­த­லில் திமுக, அதிமுகவுடன் கூட்­டணி இருக்­காது. தனித்து நின்று ஆட்­சி­யைப் பிடிப்­ப­து­தான் பாமகவின் இலக்கு," என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதுகுறித்து தந்தி தொலைக் காட்­சிக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில், "வரவு செலவுத் திட்டத்தில் மது­வி­லக்கு குறித்த அறி­விப்பு இல்­லா­தது ஏமாற்­ற­ம­ளிக்­கிறது. எதிர்­க்கட்­சி­யாக அதிமுக இன்­ன­மும் சிறப்­பாகவும், விவேக மாகவும் செயல்­பட வேண்­டும். ேவளாண் துறைக்­கான தனி பட்­ஜெட்­டுக்­காக தமிழக அரசை எத்­தனை ­முறை வேண்­டும் என்றாலும் மனம்திறந்து பாராட்­ட­லாம். பாமக-அதிமுக உறவு விரி­சல் இன்றி சுமூ­க­மாக செல்கிறது.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்த லில் பாமகவின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராம தாஸ் அறிவிக்கப்பட்டார். இருப்பி னும், அந்தத் தேர்தலில் அன்பு மணி உள்பட பாமகவினர் யாரும் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வுடன் கூட்டணி வைத்து போட்டி யிட்ட நிலையில், அடுத்த தேர்த லில் அதிமுக, திமுகவுடன் கூட்டணி இல்லை என்றும் அன்புமணிதான் முதல்வர் வேட்பாளர் என்றும் பாமகவின் இளைஞரணித் தலைவரான டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதல்வராக்கப்பட வேண்டும். மாற்றம், முன்னேற்றம் அன்புமணி ராமதாஸ் என்பது நிறைவேற வேண்டும் என்றும் ராம­தாஸ் தெரிவித்துள்ளார்.