சென்னை: அண்மையில் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாகப் பேசி, டுவிட்டரில் காெணாளி வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு என்பவர் சென்னை போலிஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, கேரள மாநிலம், ஆலப்புழாவில் பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு போலிசார் நேற்று முன்தினம் கைது செய்த னர். அவரை சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தி 27ஆம் தேதி வரை புழல் சிறையில் அடைத்தனர்.
மீரா மிதுன் காெணாளியை வெளியிட உறுதுணையாக இருந்ததாக அவரது காதலர் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஷாம் அபிஷேக், 26, என்பவரையும் மத்திய குற்றப் பிரிவு போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

