தாம்பரம்: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டு இருப்பதைத் தொடர்ந்து, தமிழகத்தின் முதல் பெண் ஓதுவாரான சுஹாஞ்சனா, 28, சென்னை மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் தனது பணியைத் தொடங்கினார்.
மொத்தம் 216 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார். இவர்களில் சுஹாஞ்சனா மட்டும் பெண் என்பதால் அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கோவிலில் இவர் பாடும் காெணாளி, சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
தாம்பரத்தை அடுத்த சேலையூர் ஐஏஎப் சாலையில் கணவர் கோபிநாத், மகள் வன்ஷிகா சக்தியுடன் வசித்து வரும் சுஹாஞ்சனா, முதல் பெண் ஓதுவாராக நியமிக்கப்பட்டது பற்றி கூறுகையில், "எங்களது சொந்த ஊர் கரூர் அருகே உள்ள வேலாயுதம்பாளையம். நான் 10ஆம் வகுப்பை படித்து முடித்த பின்னர் தேவாரம் பாடுவதில் எனக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. இைதயடுத்து, இசைப்பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது அதில் மிகுந்த ஈடுபாடு கொண்டேன்.
"பெண்கள் பல துறைகளில் பயணம் செய்தாலும் ஓதுவாராகவும் பணியாற்றமுடியும் என்பதால் இதில் ஆர்வத்துடன் சேர்ந்துள்ளேன். கோவிலில் இறைவனுக்காகப் பாடுவது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இப் பணியை வழங்கிய முதல்வருக்கு நன்றி," என்று கூறினார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் அடிப்படையில், கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயின்று தேர்வு செய்யப்பட்ட அனைத்து சாதிகளைச் சேர்ந்த 24 அர்ச்சகர்கள், 20 ஓதுவார்கள், பூசாரிகள், பட்டாச்சாரியார்கள் உட்பட 216 பேருக்கு முதல்வர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

