சென்னை: தமிழகத்தின் 18 மாவட்டங்களில் மாநில சராசரியை விடவும் கிருமித்தொற்று விகிதம் அதிகமாக உள்ளதாக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதம் சார்ந்த கூட்டங்கள், குடும்ப நிகழ்வுகளில் மக்கள் அதிக அளவில் ஒன்று சேர்வதால்தான் கிருமிப் பரவலும் அதிகமாகிறது என அவர் மேலும் கூறினார்.
மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,896 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், கிருமி பாதிப்பால் 23 பேர் உயிரிழந்தனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 34,519 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் நேற்று பேசியபோது, "தமிழகத்தில் 30 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 100க்கும் குறைவாகத்தான் உள்ளது. தமிழகத்தில் தொற்று விகிதம் 1.2% ஆக உள்ளது. கோயம்புத்தூரில் 2%, தஞ்சாவூரில் 2%, அரியலூரில் 1.9% என 18 மாவட்டங்களில் மாநில சராசரியை விட தொற்று விகிதம் அதிகமாக உள்ளது. தொற்று அதிகரிக்கும் மாவட் டங்களில் நோய்த் தடுப்பு பணிகளைத் தீவிரப்படுத்தியுள் ளோம்," என்று கூறியுள்ளார்.

