அமைச்சர் சக்கரபாணி: அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ரூ.1,000 உறுதி

அமைச்சர் சக்கரபாணி: அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ரூ.1,000 உறுதி

2 mins read
a622c851-a233-41bf-9b6d-a76bce05d815
-

சென்னை: தேர்­தல் பிர­சா­ரத்­தில் அறி­வித்­த­ப­டியே இல்­லத்­த­ரசி களுக்கு மாதந்­தோ­றும் ரூ.1,000 நிதி­யு­தவி கண்­டிப்­பாக வழங்­கப்­படும் என்று உண­வுத் துறை அமைச்­சர் சக்­க­ர­பாணி உறுதி அளித்­துள்­ளதாக தினகரன் நாளிதழ் தகவல் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்­நாடு சட்­டப்­பே­ர­வை­யில் பொது, வேளாண் வரவு செல­வுத் திட்­டம் மீதான பொது விவா­தம் தொடங்­கி­யது.

நிதி­நிலை அறிக்­கை­கள் மீது கடந்த 16ஆம் தேதி தொடங்­கிய விவா­தம் வரும் 19ஆம் தேதி வரை தொடர்ந்து நடை­பெற உள்­ளது.

இந்­நி­லை­யில், சட்­டப்­பே­ர­வை­யில் பொது விவா­தத்­தில் பங்­கேற்­றுப் பேசிய எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி கே.பழ­னி­சாமி, "அனைத்து இல்­லத் தலை­வி­க­ளுக்­கும் ரூ.1,000 மாதம்­தோ­றும் வழங்­கப்­படும் என்று வாக்­கு­றுதி கொடுத்­தீர்­கள். ஆனால், தற்­போது ஏழ்­மை­யான குடும்­பத்­திற்கு மட்­டுமே வழங்­கப் படும் என்று சொல்­வது எந்த விதத்­தில் பொருந்­தும்?" என கேட்டார்.

அதற்கு பதி­ல­ளித்த அமைச்­சர் சக்­க­ர­பாணி, "ஏழ்­மை­யான குடும்­பங்­க­ளுக்கு மட்­டு­மல்­லா­மல் தகுதி வாய்ந்த அனைத்து இல்­லத்தர­சி­களுக்­கும் ரூ.1,000 வழங்­கப்படும் என்­றும் இல்­லத்­த­ர­சி­க­ளுக்கு ரூ.1,000 வழங்­கும் திட்­டத்தை முதல்வர் கண்­டிப்­பாக விரை­வில் செயல்­ப­டுத்­து­வார்," என கூறி­னார்.

அதி­முக எம்­எல்ஏ ராஜன் செல்­லப்பா தமி­ழக அர­சின் காகித மில்லா வர­வு­செ­ல­வுத் திட்­டத்தை வர­வேற்றதுடன், பட்­ஜெட் புத்­தகங்­களும் அச்­சி­டப்­பட வேண்­டும் என கேட்­டுக்­கொண்­டார்.

அதற்கு பதி­ல­ளித்த நிதியமைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன், பேர­வை­யில் வைக்­கப்­படும் புத்­த­கங் களில் 70% புத்­த­கங்­களை உறுப்­பி­னர்­கள் எடுத்­துச் செல்வதில்லை. அவை வீணாக பழைய பேப்­பர் கடைக்­குச் செல்­கிறது. தேைவப்­ப­டு­வோர் தலை­மைச் செயலகத்­தில் பெற்­றுக்­கொள்­ள­லாம் என்­றார்.